இந்தியாவில் புதிய வேலைவாய்ப்புகள் அதிகரிப்பு !! – ஆய்வு முடிவால் மக்கள் மகிழ்ச்சி

0
இந்தியாவில் புதிய வேலைவாய்ப்புகள் அதிகரிப்பு !! - ஆய்வு முடிவால் மக்கள் மகிழ்ச்சி
இந்தியாவில் புதிய வேலைவாய்ப்புகள் அதிகரிப்பு !! - ஆய்வு முடிவால் மக்கள் மகிழ்ச்சி

இந்தியாவில் புதிய வேலைவாய்ப்புகள் அதிகரிப்பு !! – ஆய்வு முடிவால் மக்கள் மகிழ்ச்சி

இந்திய நாடு முழுவதிலும் கொரோனா ஊரடங்கினால் வேலைவாய்ப்பின்மை அதிகரித்து இருந்த சூழலில் தற்போது சில மாதங்களாக வேலைவாய்ப்புகள் உருவாகும் விகிதங்கள் உயர்ந்துள்ளதாக ஆய்வு நிறுவனங்கள் பதிவு அளித்துள்ளன.

வேலைவாய்ப்பு செய்திகள்

வேலைவாய்ப்பு இழப்பு !!

கொரோனா தொற்றின் பரவல் காரணமாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு நாடு முழுவதும் ஊரடங்கில் முடங்கியது. இதனால் பெரும்பான்மையான நிறுவனங்கள் வருவாய் இழப்பை சந்தித்ததால் அதிக அளவு வேலைவாய்ப்பு இழப்பும் ஏற்பட்டது. குறிப்பாக வெள்ளை காலர் பணி பிரிவுகள் தான் அதிக அளவில் பாதிப்பிற்கு உள்ளது. இதனால் பல லட்ச தொழிலார்கள் தங்களின் வேலைகளை இழந்ததோடு நிறுவனங்களும் அதிக அளவில் வருவாய் இழப்பினை சந்திக்க நேரிட்டது.

புதிய வேலைவாய்ப்புகள் !!

கேப்ஜெமினி, வேர்ல்பூல், டாடா ஸ்டீல், வேதாந்தா, பிலிப்ஸ், நெஸ்லே, டெலாய்ட், லிவ்ஸ்பேஸ், பெப்சிகோ மற்றும் மிந்திரா ஆகிய நிறுவனங்கள் தற்போது புதிய பணியிடங்களை உருவாக்கி வருகின்றன. அதிலும் கொரோனா காலத்திற்கு முன்பு இருந்ததை விட அதிக அளவில் தற்போது தான் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கியதாக தகவல்கள் வெளியாகின்றன. அந்த பணிகளும் கீழ் நிலை பணிகளாக இல்லாமல் உயர் நிலை பணிகளாகவே இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இன்டர்நெட் சேவையில் வேலைவாய்ப்புகள் !!

கொரோனா பாதிப்பு அதிக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தாலும் கடந்த 2019ம் ஆண்டை காட்டிலும் இந்த 2020ம் ஆண்டில் தான் அதிக அளவில் இன்டர்நெட் சேவைகள் மூலம் பணியிடங்கள் உருவாக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!