‘செம்பருத்தி’ ஷபானா, ஆர்யன் விவாகரத்து வதந்தி – ஒரே போட்டோவில் முற்றுப்புள்ளி வைத்த ஜோடி!
ஜீ தமிழ் செம்பருத்தி சீரியல் மூலமாக சின்னத்திரைக்கு அறிமுகமானவர் ஷபானா. அவர் இரண்டு மாதங்களுக்கு முன் தனது காதலரை திருமணம் செய்து கொண்ட நிலையில், இன்ஸ்டாவில் பதிவு ஒன்றை பகிர்ந்து இருக்கிறார்.
ஷபானா ஆர்யன் ஜோடி:
செம்பருத்தி சீரியல் தமிழ் சின்னத்திரை சீரியல்களில் டாப் TRPயில் இடம் பெறும் சீரியல்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த சீரியலில் கதைநாயகியாக சின்னத்திரைக்கு முதன்முறையாக ஷபானா அறிமுகமானார். அவருடைய நடிப்பு திறமையால் முதல் சீரியலிலேயே சிறந்த நடிகை என்ற விருதை பெற்றார். அவர் விஜய் டிவி பாக்கியலட்சுமி சீரியலில் செழியன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஆர்யன் என்பவரை பல ஆண்டுகளாக காதலித்து வந்தார்.
செம்பருத்தி கார்த்தி நடிப்பில் விரைவில் விஜய் டிவி “ஆபிஸ் சீசன் 2” சீரியல் – ஷாக் ப்ரோமோ!
ஆனால் இருவரும் வெவ்வேறு மதம் என்பதால் இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்புகள் கிளம்பியது. அதனால் நண்பர்கள் உதவியுடன் 2 மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்து ஒரே மாதத்தில் இருவரும் பிரிய இருப்பதாக சர்ச்சைகள் பல கிளம்பியது. இவர்களது திருமணத்திற்கு ஆர்யன் வீட்டில் எதிர்ப்பு வருவதால் விவாகரத்து செய்ய இருப்பதாக தகவல்கள் தீயாய் பரவியது. ஆனால் இருவரும் இது குறித்து எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 5” நிகழ்ச்சி டைட்டில் வின்னர் இவர் தானாம் – ரசிகர்கள் மகிழ்ச்சி!
இந்நிலையில் இவர்களுக்கு திருமணம் முடிந்து இரண்டு மாதங்கள் ஆன நிலையில் ஆர்யன் ஷபானா உடன் இருக்கும் போட்டோ ஒன்றை வெளியிட்டு ‘Happiest 2nd month My Pondatti’ என வாழ்த்து கூறி இன்ஸ்டாவில் பதிவு ஒன்றை பதிவிட்டு இருக்கிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஷபானா தே போட்டோவை பகிர்ந்து ‘You too’ என பதிவிட்டு இருக்கிறார். இதனால் அவர்கள் நடுவில் எந்த பிரச்சனையும் இல்லை என்பது வெளிப்படையாக தெரிந்துள்ளது.