TNUSRB 900 உதவி ஆய்வாளர் காலிப்பணியிடங்கள் – தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு!
தமிழக காவல்துறை புதிதாக காவல், சிறை, தீயணைப்பு துறைகளுக்கு, சீருடை பணியாளர் தேர்வு குழுமம் வாயிலாக, இரண்டாம் நிலை காவலர்கள் மற்றும் 900 SI க்களை தேர்வு செய்ய, உயர் அதிகாரிகள் ஆலோசித்து வருவதாகவும் விரைவில் அறிவிப்பு வெளியாக உள்ளதாகவும் கூறியுள்ளனர்.
முக்கிய தகவல்:
தமிழகத்தில் கொரோனா எழுச்சி காரணமாக மாநிலம் முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் அனைத்து தொழிற்துறைகளும் முடக்கப்பட்டது. இருப்பினும் காவல்துறை கொரோனா காலகட்டத்தில் பொதுமக்கள் பாதுகாப்புக்காக இரவு பகல் பாராமல் உழைத்து வந்தன. மேலும் கொரோனா தடுப்புப் பணிகளில் முன் வரிசையில் நின்று களப்பணியாற்றும் காவல்துறையிலும் பலருக்கு கொரோனா தொற்று பரவி சிலர் உயிரளித்தனர். கொரோனா தாக்கம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பதிவுகளையும் அளித்து வந்தனர்.
10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து? உச்ச நீதிமன்றம் மறுப்பு!
கொரோனா பரவலைத் தடுக்க சுகாதாரத் துறையை தொடர்ந்து காவல்துறை அதிகமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வந்தது. இந்நிலையில் தற்போது தமிழக காவல் துறையில் அதிக காவலர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், புதிதாக 900 க்களை தேர்வு செய்ய, உயர் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். கொரோனா காலகட்டத்தில் எந்த ஒரு வேலைவாய்ப்பு அறிவிப்புகளும் வெளிவராமல் இருந்தது. இருப்பினும் தற்போது கொரோனா தாக்கம் குறைந்து வருவதால் மீண்டும் அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. இந்த நிலையில் காவல், சிறை, தீயணைப்பு துறைகளுக்கு, சீருடை பணியாளர் தேர்வு குழுமம் வாயிலாக, இரண்டாம் நிலை காவலர்கள் மற்றும் SI க்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
சென்னை: சவரனுக்கு ரூ.864 உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
அந்த வகையில், காவல்துறைக்கு புதிதாக, 900 SI க்களை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு ஆகஸ்ட் மாதத்தில் வெளிவர உள்ளதாகவும்,விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் ஏற்றுக் கொள்ளப்பட உள்ளதாக காவல்துறை குறிப்பிட்டு உள்ளது. மேலும் SI பணிக்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர் பட்டப்படிப்பு முடித்து இருக்க வேண்டும். இதனை தொடர்ந்து தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு, டிசம்பரில், எழுத்து, உடற்திறன், நேர்முக தேர்வு என, மூன்று நிலைகளில் தேர்வுகள் நடத்த, போலீஸ் உயர் அதிகாரிகள் ஆலோசித்து வருவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.