திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க செல்லும் பக்தர்களுக்கு ஹாப்பி நியூஸ் – தேவஸ்தானம் அறிவிப்பு!
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையானை சந்திக்க தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தகோடிகள் தரிசனம் செய்து வருகின்றனர். அதிலும் பலர் நடைபாதை வெளியாக வந்து தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் அவர்களுக்கு வசதியாக ஸ்ரீநிவாச மங்காபுரம் ஸ்ரீவாரி மெட்டு மலைப்பாதை வழியாக, திருமலைக்கு செல்லலாம் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவில்
நாட்டில் படையெடுத்து வந்த கொரோனா தொற்றின் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று கூறி இருந்தனர். ஆனால் ஒரு கால கட்டத்திற்கு பின்னர் செயல்பட்டு வந்த ஊரடங்கில் நிறைய தளர்வுகளை தெலுங்கானா மாநிலம் கொண்டு வந்தது. அதனை தொடர்ந்து திருப்பதி தேவஸ்தானனும் பக்தர்களுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்கு ஆன்லைனில் டிக்கெட்களை விநியோகம் செய்து வந்தனர். ஒரு நாளைக்கு 15 ஆயிரம் டிக்கெட்கள் விற்று வருகிறது. ஒரு டிக்கெட்டின் விலை ரூபாய் 300 எனவும் தெரிவித்து இருந்தனர்.
மே மாதத்திற்கான வங்கி விடுமுறை நாட்களின் பட்டியல் – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
இந்த நிலையில் இது தவிர நேரில் சென்று இலவச டிக்கெட்கள் வாங்கும் வசதியும் உள்ளது. மேலும் இந்த இலவச தரிசனத்திற்கு டோக்கன்களும் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த டோக்கன்களை திருப்பதியில் உள்ள பூதேவி வளாகம், சீனிவாசம் வளாகம் மற்றும் ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமி சத்திரம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கவுண்டர்களில் பெற்று கொள்ளலாம். இந்த டோக்கன்கள் ஒரு நாளைக்கு 15 ஆயிரம் விதம் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு பக்தர்கள் ஆன்லைனில் பதிவு செய்தல் மற்றும் நேரில் சென்றும் டிக்கெட்களை பெற்று திருப்பதியில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் தற்போது தெலுங்கானாவில் உள்ள அன்னமய்யா பவனில் நேற்று அறங்காவலர் குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் அதன் தலைவர் ஒய்.வி. சுப்பாரெட்டி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அது என்னவென்றால், திருப்பதியில் விரைவில் சர்வ தரிசன டோக்கன்கள் வழங்கப்படும். வரும் மே மாதம் 5ஆம் தேதி முதல் சீரமைக்கப்பட்ட ஸ்ரீவாரி மெட்டு மலைப்பாதை திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அதனை தொடர்ந்து திவ்ய தரிசனம் மீண்டும் தொடங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.