TNPSC குரூப் 4 VAO தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு – உடனே பாருங்க!
தமிழகத்தில் சமூக ஊடகங்களில் பரவி வரும் TNPSC குரூப் 4 தேர்வு குறித்த அறிவிப்புகளை யாரும் நம்ப வேண்டாம் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. தேர்வாணைய அறிவிப்புகள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டுமே வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC:
தமிழகத்தில் அரசுத்துறை பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு அதன் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். 2022ம் ஆண்டு TNPSC தேர்வுகளை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் எண்ணிக்கையிலான மக்கள் எழுதக் கூடிய குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த மாதம் 23ம் தேதி குரூப் 2,2A தேர்வு குறித்த அறிவிப்பு வெளியானது. அதில் மே 21ம் தேதி தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடுதலாக ரூ.4500 – குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை!
இந்த நிலையில் நடப்பாண்டு முதல் TNPSC தேர்வுகளில் புதிய மாற்றங்களும் கொண்டு வரப்பட்டுள்ளது. அதில் நடப்பாண்டு முதல் அனைத்து வித அரசு போட்டித்தேர்வுகளிலும் தமிழ் மொழித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் அதில் 40 சதவீத மதிப்பெண்கள் பெறுவது அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 40% மதிப்பெண் பெற்றால் மட்டுமே அடுத்த பாடப்பகுதி வினாக்கள் மதிப்பீடு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது குரூப் 2,2A தேர்வின் விண்ணப்பங்கள் முடிவடைந்த நிலையில் குரூப்4 தேர்வு அறிவிப்பு இந்த மாதம் வெளியாகும் என்று TNPSC தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் குரூப் 4 தேர்வு குறித்த அறிவிப்பு ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இதனை யாரும் நம்ப வேண்டாம் என்று TNPSC தேர்வாணையம் தெரிவித்துள்ளது. குரூப் – 4 குறித்த தவறான அறிவிக்கை சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இதனை விண்ணப்பதாரர்கள் கருத்தில் கொள்ள வேண்டாம் என தேர்வாணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் TNPSC தேர்வு குறித்த அறிவிப்புகள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டுமே வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளது.