TN TRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு – தேர்வாணையம் தகவல்!
தமிழகத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு கடந்த டிசம்பர் மாதம் நடத்தப்பட்டது. மேலும் இதில் தேர்ச்சி பெற்றவர்கள் தங்களின் சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டார்கள். அதனால் தேர்வர்களிடம் இருந்து இது தொடர்பாக பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதற்கு விரைவில் பதிலளிக்கப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
ஆசிரியர் தேர்வு
தமிழகத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1060 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியத்தால் கடந்த டிசம்பர் மாதம் நடத்தப்பட்டது. மேலும் இதில் தேர்ச்சி பெற்றவர்கள் தங்களின் சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டார்கள். இதனை கடந்த 18ம் தேதிக்குள் பதிவேற்ற செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் பதிவு செய்வதில் இணையதளத்தில் சர்வர் வேகம் குறைவாக உள்ளதாக புகார்கள் பெறப்பட்டது.
தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – குறையும் கோடை விடுமுறை!
அதனால் தங்களுக்கு மேலும் கூடுதலான கால அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதனால் ஏப்ரல் 1ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில் தேர்வர்களிடம் இருந்து இது தொடர்பாக பல்வேறு கோரிக்கை மனுக்கள் இமெயில் வாயிலாக பெறப்பட்டுள்ளன. மேலும் இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி.,யின் தலைவர் லதா முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதில் தெரிவித்தாவது, தேர்வர்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கை மனுக்கள் இமெயில் வாயிலாக பெறப்பட்டுள்ளன. அதற்குரிய பதில்கள் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
மேலும் நன்னடத்தை சான்றிதழ் பதிவேற்றம் செய்வது தொடர்பாகவும் 1,398 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இதில் 1,085 மனுக்களுக்கு உரிய பதில்கள் அனுப்பப்பட்டுள்ளன. இதே போல பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அனைத்து தேர்வர்களுக்கும் இது தொடர்பாக 10 நாட்களுக்குள் பதில் அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தேர்வர்கள் தங்களுக்கு பதில் மனு கிடைக்கிறதா என்று உறுதி செய்து கொள்ள வேண்டும். இதையடுத்து பதில் அளிக்கப்படாத தேர்வர்களின் கோரிக்கை மனு பரிசீலனையில் வைக்கப்பட்டுள்ளது. அதனால் தேர்வர்கள் மீண்டும் மீண்டும் மனுவினை அனுப்ப வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.