தமிழக பள்ளி மாணவ, மாணவிகளுக்கு முக்கிய தகவல் – பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் பாலியல் பிரச்சினைகள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
மாணவ, மாணவிகள் கவனத்திற்கு
தமிழகத்தில் தற்போது பள்ளிகளில் கூட பாலியல் வன்முறைகளில் ஆசிரியர்கள் ஈடுபடுகிறார்கள். இதனால் மாணவிகள் தங்களுக்கு நிகழ்ந்த பிரச்சினையை யாரிடமும் சொல்லாமல் மிகவும் துன்புற்று தற்கொலை செய்து தங்களது உயிரை மாய்த்து கொள்கிறார்கள். இந்த கொடூரம் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இத்தகைய விபரீதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனை தொடர்ந்து பாலியல் பிரச்சனை ஏற்படும் பொழுது மாணவிகள் உடனடியாக புகார் அளிக்க உரிய வசதிகள் செய்யப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது.
டிச.25 முதல் சாலைகளில் 10 பேருக்கு மேல் செல்வதற்கு தடை – புதிய கட்டுப்பாடுகள் அமல்! அரசு நடவடிக்கை!
மேலும் ஒவ்வொரு பள்ளிக்கும் உளவியல் நிபுணர்களை கொண்டு மாணவ, மாணவிகளுக்கு கவுன்சிலிங் தரப்பட்டு வருகிறது. அத்துடன் மாணவிகளின் பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதையடுத்து பள்ளி நிர்வாகத்திற்கும் தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகிறது. வருகிற மூன்றாம் பருவ பாடப்புத்தகத்தில் விழிப்புணர்வு வாசகங்கள் மற்றும் உதவி எண்கள் போன்றவற்றை அச்சடித்து வழங்க வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு – பதவி மற்றும் தேர்வு குறித்த விபரங்கள்!
அதன்படி 14417, 1098 என்ற புகார் எண்களை பாடப்புத்தகத்தின் முன் பக்கத்தில் அச்சிட்டு வழங்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளும் ஆலோசனை வழங்கி வருகின்றனர். தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உளவியல் நிபுணர்களை நியமிக்க வேண்டும் என்றும் அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் தவறாக நடந்து கொள்ளும் ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கையை பள்ளி நிர்வாகம் எடுக்க வேண்டும். இது போன்று மாணவிகளை பாதுகாப்பான சூழலில் வைத்திருக்க பள்ளி நிர்வாகமும் அரசும் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.