அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் முக்கிய அறிவிப்பு – தரநிலைகளில் மாற்றம்!
இந்தியாவில் ரேஷன் கார்டு விதிகளை உணவு மற்றும் பொது விநியோகத் துறை மாற்றி வருகிறது. இந்த மாற்றங்கள் செய்யப்பட்ட புதிய தரநிலை விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரேஷன் கார்டு:
இந்தியாவில் பொது விநியோக திட்டத்தின் கீழ் ரேஷன் அட்டைதாரர்கள் மாதம் தோறும் மானிய விலையில் அத்தியாவசியப் பொருட்களான அரிசி, கோதுமை, தானியங்கள், பருப்பு , எண்ணெய், உள்ளிட்ட பொருட்களை பெற்று பயன் அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் இந்தியா முழுவதும் வேலைக்காக இடம்பெயரும் தொழிலாளர்களை கருத்தில் கொண்டு அவர்களும் பயன்பெறும் வகையில் இந்தியாவில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டமும் கொண்டு வரப்பட்டது. தற்போது அனைத்து மாநிலங்களிலும் இந்த திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இதன் மூலம் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் வசிக்கும் மாநிலங்களில் உள்ள ரேஷன் கடைகள் மூலம் பொருட்களை பெற்று வருகின்றனர்.
Post Office இல் சேமிக்க நினைப்போர் கவனத்திற்கு – குறைந்தபட்சம் ரூ.100 முதல்! சூப்பர் திட்டங்கள்!
இந்தியாவில் PHH, PHH-AAY, NPHH, NPHH-S, NPHH-NC என்ற 5 வகையான ரேஷன் கார்டுகள் உள்ளது. இவை குடும்ப தலைவரின் வருமானத்தை பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது. ரேஷன் கார்டு முக்கிய ஆவணங்களில் ஒன்றாகவும், இருப்பிட சான்றாகவும் ஒப்புக் கொள்ளப்படுகிறது. அதனால் தற்போது ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. முதலில் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க தாலுகா அலுவலகம் செல்ல வேண்டிய நிலை இருந்தது. தற்போது ஆன்லைன் மூலமாகவே எளிதாக விண்ணப்பிக்கலாம்.
தமிழக அரசு வழங்கும் விருதுகள் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு! விண்ணப்பங்கள் வரவேற்பு!
இந்த நிலையில் ரேஷன் கார்டு விதிகளை உணவு மற்றும் பொது விநியோகத் துறை மாற்றி வருகிறது. இந்த புதிய தரநிலை அமலுக்கு வந்த பிறகு மலிவு விலையில் கிடைக்கும் ரேஷன் பொருட்களை பெற தகுதியுடையவர்கள் மட்டுமே பயன்பெறுவார்கள், தகுதியில்லாதவர்கள் பயன் பெற முடியாது. இந்த 6 மாதங்களாக, தரநிலை மாற்றம் தொடர்பாக, மாநிலங்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் தரநிலை இறுதி செய்யப்படும் என்று கூறப்படுகிறது.