தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள் கவனத்திற்கு – கல்வித்துறை கூடுதல் சலுகைகள்!
தமிழகத்தில் நடப்பாண்டு பொதுத்தேர்வு எழுத உள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கூடுதல் சலுகைகள் அளிக்க மாநில கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளி:
தமிழகத்தில் கடந்த 2 வருடங்களுக்கு பிறகு நடப்பாண்டில் தான் 10,11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் நடக்க உள்ளது. இதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாணவர்களின் பாதுகாப்பு கருதி 14 முதல் 18 வயது வரை உள்ள மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் தீவிரமாக செலுத்தப்பட்டது. பொதுத்தேர்வு முடிவுகள் தான் மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கிய பொறுப்பு வகிக்கிறது. இதனால் மாணவர்களுக்கு நடப்பாண்டில் கட்டாயம் பொதுத்தேர்வு நடத்த தமிழக பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டது.
தொடரும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள்? அரசின் அதிரடி அறிக்கை!
அதன்படி மாணவர்களுக்கு மே முதல் வாரத்தில் பொதுத்தேர்வுகள் நடக்க உள்ளது. அதற்கு முன்னதாக செய்முறைத்தேர்வுகளும் நடத்தப்பட உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழக தேர்வுத்துறை நடப்பாண்டில் பொதுத்தேர்வு எழுத உள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கூடுதல் சலுகைகள் அளிப்பது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய தேர்வு வாரியத்தின் சலுகைகளை மாநில தேர்வு வாரியமும் பின்பற்ற உள்ளதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கூடுதல் சலுகைகள் வழங்கப்பட உள்ளது. மாற்றுத்திறனாளி தேர்வர்கள் சொல்வதை எழுதுபவருக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் அவகாசம் மற்றும் மொழிப்பாட விலக்கு உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்பட உள்ளது. 10ம் வகுப்பில் அறிவியல் பாட செய்முறைத் தேர்வில் விலக்கு கோரும் மாணவர்களுக்கு விலக்கு அளிக்க அனுமதி அளிக்கப்படும். 11, 12ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் செய்முறைத்தேர்வில் ஆய்வக உதவியாளரை பணியமர்த்திக் கொள்ள அனுமதி அளிக்கப்படும், மாற்றுத்திறனாளி மாணவர்கள் தரை தளத்திலேயே தேர்வெழுத வசதிகள் அளிக்கப்படும். தேர்வுக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு உள்ளிட்ட சலுகைகளுக்கு கூடுதலாக அனுமதி அளிக்கப்படும் என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.