தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு 2022 – முக்கிய கோரிக்கை முன்வைப்பு!
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடும் விதமாக பொங்கல் பரிசு தொகுப்பை அரசு வழங்கி வருகிறது. இது தொடர்பான முக்கிய கோரிக்கையை பணியாளர் சங்க மாநில செயலர் அவர்கள் வைத்துள்ளார்.
பொங்கல் தொகுப்பு
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடும் விதமாக பொங்கல் பரிசு தொகுப்பை அரசு வழங்கி வருகிறது. இந்த பொங்கல் பரிசு தொகுப்பை பேக்கிங் முறையில் வழங்க வேண்டும் என்று பணியாளர் சங்க மாநில செயலர் அவர்கள் வலியுறுத்தி உள்ளார். இதனை மதுரையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்துள்ளார். தமிழகத்தில் 4500 துவக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள், 150 நகர கூட்டுறவு கடன் சங்கங்கள் இயங்கி கொண்டு இருக்கிறது. இதில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பங்கள் வரவேற்பு..!
இதன் மூலமாக விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்குவது பற்றிய அறிவிப்பை ஆண்டு தோறும் குறியீடு நிர்ணயம் செய்ய வேண்டும் என்று மத்திய கூட்டுறவு வங்கி நிர்வாகம் மற்ற துவக்க கூட்டுறவு சங்கங்களுக்கு ஆணையிடுகிறது. இந்த நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்றும் கூட்டுறவு அதிகாரிகள் இதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களாக இருந்தால் அவர்களுக்கு என்று கருணை ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.
மாநில அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – 20% வரை சம்பள உயர்வு! சூப்பர் அறிவிப்பு!
இதையடுத்து பல்வேறு சங்கத்தில் காலிப்பணியிடங்கள் அதிகரித்து வருகிறது. இதனால் பல இடங்களில் சங்க செயலாளர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட சங்கங்களை கூடுதல் பொறுப்பாக கவனிக்கின்றனர். இதனால் கூடுதல் பணி சுமை அவர்களுக்கு ஏற்படுகிறது. அதனால் கூட்டுறவு சங்கங்களிலுள்ள காலிப்பணியிடங்களை கால தாமதமின்றி நிரப்ப வேண்டும் என்றும் பிடிக்கும் தொடக்க கூட்டுறவு சங்களில் டி.டி.எஸ் பிடிப்பதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் பணியாளர் சங்க மாநில செயலாளர் ஆசிரியத்தேவன் அவர்கள் கூறியுள்ளார்.