TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 – உடனே பாருங்க!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலையத்துறை துணை சேவை அமைப்பில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
வேலை வாய்ப்பு:
கடந்த இரண்டு வருட காலமாக கொரோனா பாதிப்பினால் தமிழக அரசு வேலைவாய்ப்புகள் அறிவிப்புகளை அறிவிக்கப்படாமல் இருந்தது. சமீபகாலமாக குறைந்த நிலையில் ஒவ்வொரு தமிழக அரசு துறைகளிலும் மற்றும் தனியார் துறைகளிலும் வேலை வாய்ப்பு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது சமயம் மற்றும் அறநிலையத் துறையிலும் வேலைவாய்ப்புகளை அறிவித்துள்ளது. இந்த பணியிடங்களுக்கு எப்படி விண்ணப்பிப்பது மற்றும் கல்வித் தகுதி போன்றவற்றை பார்ப்போம்.
சமயம் மற்றும் அறநிலைத்துறையில் Executive Officer Grade III பணிக்கு என்று காலியிடங்களுக்கு நிரப்பப்படவுள்ளன. இந்த பணிக்கு மொத்தம் 42 பணியிடங்கள் உள்ளன. மேலும், இந்த பணிக்கு விண்ணப்பித்தவர்கள் கட்டாயம் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் அல்லது பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிலையத்தில் Arts / Science / Commerce போன்ற பிரிவின் கீழ் ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
இதற்கான வயது வரம்பு 01.07.2022 அன்றைய தினத்தின்படி கட்டாயம் 25 வயது நிறைவுபெற்றிக்க வேண்டும். மேலும் அதிகபட்ச வயதானது, SC, SC(A), ST, MBC அல்லது DC, BC & Destitute Widows of all Castes ஆகிய வகுப்பைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பு கிடையாது என தெரிவித்துள்ளன. அதுமட்டுமில்லாமல் இந்த பிரிவினர்கள் தவிர மற்ற பிரிவினரை சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு 37 வயது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த பணிக்கு தேர்வு செய்பவர்களுக்கு மாத சம்பளம் ரூ.20,600 முதல் அதிகபட்சம் ரூ.75,900 வரை வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் பதிவு கட்டணம் ரூ.150 செலுத்த வேண்டும் எனவும், தேர்வு கட்டணம் ரூ.100 செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு செய்யும் முறை எழுத்து தேர்வு,சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
Exams Daily Mobile App Download
விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஜூன் 17 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். அதேபோல், Paper-I தேர்வானது 10.09.2022 (9.30 A.M to 12.30 P.M) நடக்கும் என்றும், Paper – II தேர்வானது 10.09.2022 (02.00 P.M. to 05.00 P.M) நடக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஆன்லைன் விண்ணப்பங்கள் பதிவிறக்கம் செய்து, சரியாக பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை அத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.