ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு – டிக்கெட் தொலைந்து விட்டால் இதை செய்தால் போதும்!

0
ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு - டிக்கெட் தொலைந்து விட்டால் இதை செய்தால் போதும்!
ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு - டிக்கெட் தொலைந்து விட்டால் இதை செய்தால் போதும்!
ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு – டிக்கெட் தொலைந்து விட்டால் இதை செய்தால் போதும்!

கொரோனா காலகட்டத்தில் ரயில் சேவை நிறுத்தப்பட்டு இருந்தது. இதனால் ஏராளமான பயணிகள் அதிகம் பதிப்படைந்தனர். தற்போது தாக்கம் குறைந்து மீண்டும் சேவைகள் தொடங்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் முன்பதிவு செய்த ரயில் டிக்கெட் திடீரென்று தொலைந்துவிட்டால் நாம் என்ன செய்ய வேண்டும் என்ற விதிமுறை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

முக்கிய அறிவிப்பு:

நாம் அனைவரும் நீண்ட தூர பயணத்திற்கு தேர்ந்தெடுக்கும் முதல் போக்குவரத்து சேவை, ரயில் சேவை தான். ரயில் சேவை கட்டணம் சாமானிய மக்களுக்கு பெரிதும் உதவும் வகையில் உள்ளன. பேருந்து பயணத்தை விட ரயில் பயணம் விரைவாகவும் சௌகரியமாகவும் இருக்கும். இதனால் தினமும் லட்சக்கணக்கானோர் ரயில்களில் பயணிக்கின்றனர். மேலும் ரயில்களில் டிக்கெட் புக்கிங் செய்ய பல வழிகள் உள்ளன. அவரவர் வசதிக்கு ஏற்ப, டிக்கெட் கவுண்டரில் நேரடியாகவோ, ஆன்லைன் மூலமாகவோ முன்பதிவு செய்யலாம். பெரும்பாலானோர் மொபைல் ஆப், ஆன்லைன் புக்கிங் மூலமாகவே டிக்கெட் பெறுகின்றனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ரசிகர்கள் கவனத்திற்கு – பிளே ஆஃப்களில் நுழைவதற்கான வாய்ப்பு?

ஆன்லைன் மூலம் டிக்கெட் எடுக்கும் போது, டிக்கெட் பிரிண்ட் கையில் வைத்துக் கொண்டு அலையத் தேவையில்லை. மொபைல் போனில் டிக்கெட்டை காட்டி பயணிக்கலாம். ஆனால் நேரடியாக முன்பதிவு செய்தவர்கள் கையில் டிக்கெட் வைத்திருக்க வேண்டும் என்பது கட்டாயம் ஆகும். எதிர்பாராத விதமாக பயணம் தொடங்குவதற்கு முன்பாக டிக்கெட் தொலைந்துவிட்டால், நாம் என்ன செய்வது என்று தெரியாமல் திணறுவோம்.

ஒருவேளை போனில் அந்த டிக்கெட் இருந்தால் பிரச்சினை இல்லை. ஆனால் அதுவும் இல்லாவிட்டால், தொலைந்துபோன டிக்கெட்டை மீண்டும் வாங்கும் வசதி இருக்கிறது. ஆனால் அதற்கு கொஞ்சம் செலவு செய்ய வேண்டியிருக்கும். இந்திய ரயில்வே விதிமுறைப்படி, கன்ஃபர்ம் டிக்கெட் அல்லது RAC டிக்கெட் பயணத்துக்கு முன்பாக தொலைந்து விட்டால் அதற்கு டூப்ளிகேட் டிக்கெட் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். ரயில் பயணம் தொடங்குவதற்கு முன்பு டிக்கெட் தொலைந்து போனால் அதற்கு அபராதமாக ரூ.50 முதல் ரூ.100 வசூலிக்கப்படும்.

Exams Daily Mobile App Download

ஒருவேளை பயணம் தொடங்கிய பின் டிக்கெட் தொலைந்துபோனால், கட்டணத்தில் 50 சதவீதம் வரை வசூல் செய்யப்படும். இதற்கிடையில் டூப்ளிகேட் டிக்கெட் வாங்கியபிறகு, தொலைந்த டிக்கெட் கிடைத்து விட்டால், இரண்டு டிக்கெட்டையும் கொடுத்து அபராதம் செலுத்திய தொகையை ரீஃபண்ட் வாங்கிக் கொள்ளலாம். எனினும் ரீஃபண்ட் தொகையில் 5 சதவீதம் வரை அல்லது 20 ரூபாய் வரை பிடித்தம் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!