இரவு நேரங்களில் ரயில் பயணம் செல்லும் பெண்கள் கவனத்திற்கு – இத்தனை வசதிகள் உண்டா?
இரவு நேரங்களில் ரயில்களில் பயணம் செய்யும் பெண்களின் பாதுகாப்பிற்காக இந்திய ரயில்வே சட்டத்தின் கீழ் பல்வேறு சலுகைகள் கொடுக்கப்படுகிறது. இது குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் காணலாம்.
ரயில்வே சட்டம்
நாடு முழுவதும் உள்ள அனைத்து தரப்பு மக்களாலும் வரவேற்கப்படும் ஒரு போக்குவரத்து என்றால் அது ரயில் பயணம் தான். ஏனென்றால், விலை குறைந்த மற்றும் பாதுகாப்பான பயணமான ரயில் போக்குவரத்து மக்களின் விருப்பமாக இருந்து வருகிறது. இதனால், ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான மக்கள் ரயில்களில் பயணம் செய்து வருகின்றனர். மேலும், இந்த ரயில் போக்குவரத்து அரசுக்கும் எக்கச்சக்க வருமானத்தை வழங்குகிறது. பொதுவாக இந்தியாவில் நீண்ட தூர ரயில்கள் இரவு நேரங்களில் இயக்கப்படுவது வழக்கம். இந்த இரவு பயணம் சில நேரங்களில் ஆபத்தானதும் கூட.
தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் – அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை!
ஏனென்றால், இரவு நேரங்களில் ரயில் நிலையங்களில் பல குற்றங்கள் நடைபெறுவது உண்டு. இதனால், பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கடந்த 1989ல் இந்திய அரசாங்கம் ரயில்வே சட்டத்தில் பல சட்டங்களை அமல்படுத்தியது. இந்த சட்டங்களின் படி, எல்லா ரயில்களிலும் பெண்கள் மட்டும் பயணிக்க தனி பெட்டி ஒதுக்கப்படும். அந்த பெட்டியில் பயணிக்கும் பெண்களின் டிக்கெட்டுகளை அவர்கள் ரயில் நிலையங்களில் இருந்து இறங்கும் போது தான் ஆண் பரிசோதகர் சரிபார்க்க முடியும். அதே போல, இரவு நேரங்களில் டிக்கெட் இல்லாமல் ஒரு பெண் தனியாகவோ அல்லது குழந்தையுடன் பயணித்தால் அவரை ரயிலில் இருந்து கீழே இறங்கி விட முடியாது.
Exams Daily Mobile App Download
அடுத்ததாக, இந்திய ரயில்வே சட்டம் பிரிவு 311ன் படி பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட பெட்டியில் ராணுவ வீரர் ஒருவர் ஏறினால் அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. மற்றபடி, அவரை அடுத்த நிறுத்தத்தில் இறங்க சொல்லலாம். தவிர சட்டப் பிரிவு 162ன் படி பெண்களுக்கான பெட்டியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் அதுவும் ஆண் குழந்தைகளாக இருந்தால் அவர்கள் 12 வயது வரைக்கும் பயணிக்க முடியும். மேலும், இந்தியா முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் பெண் பயணிகளின் பாதுகாப்பிற்காக ஓய்வெடுக்கும் அறையில் 24 மணி நேரமும் சிசிடிவி கேமரா கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.