TN TRB ஆசிரியர் காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – கல்வித்துறை அறிக்கை!
தமிழகத்தில் மாணவர்களின் எண்ணிக்கையை கணக்கிடும் போது, 9000 ஆசிரியர்களின் காலியிடங்கள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக தமிழகத்தில் உள்ள வட மாவட்டங்களில் அதிக அளவில் ஓராசிரியர் பள்ளிகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆசிரியர்களின் காலியிடங்கள்
தமிழ்நாடு தேசிய அளவிலான சோதனையின் அடிப்படையில், 27 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அதாவது, தொடக்க கல்வி இயக்கத்தின் கீழ் 22,837 அரசு தொடக்கப் பள்ளிகள் மற்றும் 6,587 அரசு நடுநிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில் 2022-2023 ஆம் கல்வியாண்டில் 22 லட்சத்து 40 ஆயிரத்து 656 மாணவர்கள் படிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மாணவர்களுக்கு மொத்தம் 69 ஆயிரத்து 640 இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறது கூறப்படுகிறது.
சென்னையில் நாளை (ஜூன் 10) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழ்நாட்டில் உள்ள ஊராட்சி ஒன்றிய, நகராட்சி மற்றும் அரசு நடுநிலைப் பள்ளி வளாகத்திற்குள் இயங்கி வரும் 2,381 அங்கன்வாடி மையங்களில் LKG மற்றும் U.K.G வகுப்புகள் 2018ம் ஆண்டு தொடங்கப்பட்டது. எல்கேஜி யுகேஜி வகுப்புகளை எடுக்கும் ஆசிரியர்கள் வயது முதிர்வின் காரணமாக இந்த வகுப்புகளை எடுக்க தயக்கப்பட்டனர். அதனால் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என கோரிக்கையை முன் வைத்தனர். இதனால் இவர்களின் கோரிக்கைகளை ஏற்று கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பணியமர்த்த உத்தரவிட்டார். அதனால் அரசு பள்ளிகளில் இருக்கும் LKG மற்றும் U.K.G வகுப்புகளை மூட திட்டமிட்டுள்ளனர். ஆகையால் 5 வயது பூர்த்தி அடைந்த பின்னரே அரசு தொடக்கப் பள்ளிகளில் முதல் வகுப்பில் சேர்க்கப்படுவர் என தெரிவித்துள்ளனர்.
கடந்த 2013-2014 ஆம் கல்வியாண்டு முதல் ஆசிரியர்கள் நியமிக்கப்படாததால், இந்த கல்வியாண்டின் இடைநிலை ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு சுமார் 4863 காலிப் பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டன. குறிப்பாக, சுமார் 3,800 அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்புகளைக் எடுக்க ஒரே ஒரு ஆசிரியர் தான் இருந்தனர். இந்த ஓராசிரியர் பள்ளிகள் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கடலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய வட மாவட்டங்களில் இருந்தது.
Exams Daily Mobile App Download
கொரோனா பெருந்தொற்று கட்டுப்படுத்தப்பட்டு , பள்ளிகள் பாதுகாப்பான முறையில் திறக்கப்பட்டப் பின்னர் அரசுப் பள்ளிகளில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இப்படி சேர்ந்த மாணவர்களுக்கு 1 ஆசிரியருக்கு 40 மாணவர்கள் என்ற விகிதத்தில் சுமார் 4,500 க்கும் மேற்பட்ட கூடுதல் இடைநிலை ஆசிரியர்கள் தேவைப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் ஏற்கனவே உள்ள காலிப் பணியிடங்கள் மற்றும் கூடுதல் மாணவர் சேர்க்கையால் மொத்தம் 9,000 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தேவைப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.