TN TRB தேர்விற்கு விண்ணப்பிக்க தவறியோர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

0
TN TRB தேர்விற்கு விண்ணப்பிக்க தவறியோர் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
TN TRB தேர்விற்கு விண்ணப்பிக்க தவறியோர் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
TN TRB தேர்விற்கு விண்ணப்பிக்க தவறியோர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடிப்படையில், ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத விரும்புவோர் கடந்த மார்ச் 14ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது. தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி உடன் நிறைவடைந்தது. இந்நிலையில் TET தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளதாக தேர்வு வாரியம் தெரிவித்து உள்ளது.

முக்கிய அறிவிப்பு:

மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி 8ஆம் வகுப்பு வரையிலான இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெற வேண்டியது அவசியம் ஆகும். தமிழகத்தில் இந்த ஆசிரியர் தகுதித் தேர்வை, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது. தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் விதிமுறையின்படி ஆண்டுதோறும் டெட் தேர்வு நடத்தப்பட வேண்டும். கடைசியாக 2019-ம் ஆண்டு நடத்தப்பட்டடெட் தேர்வு, கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 2020, 2021 என கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படவில்லை. தற்போது, பாதிப்பு குறைந்துள்ள நிலையில், கொரோனா தொடர்பான அனைத்து கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளன.

நாட்டில் ஏப்ரல் 30 வரை மீண்டும் முழு ஊரடங்கு அமல் – பிரதமர் எடுக்கப்போகும் முடிவு?

அதன் அடிப்படையில் 2022-ம் ஆண்டுக்கான ‘டெட்’ தேர்வு குறித்த அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த மார்ச் 7-ம் தேதி வெளியிட்டது. தேர்வை பொறுத்தவரையில் ஆசிரியர் தகுதி தேர்வு தாள்-1, தாள்-2 என்ற அடிப்படையில் நடைபெற உள்ளது. இதன்படி, டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி படித்தவர்கள் முதல் தாள் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் இரண்டாம் தாள் தேர்வினை எழுதலாம். மேலும் முதல் மற்றும் இரண்டாம் தாளில் 150 வினாக்கள் இடம்பெறும். இதில் பெரும்பாலும் குழந்தை வளர்ச்சி மற்றும் கற்பித்தல், மொழிப்பாடம் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் இருந்து வினாக்கள் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க எவ்வித வயது வரம்பு கட்டுப்பாடும் கிடையாது என்பதால் வழக்கத்தை விட மிக அதிகமான எண்ணிக்கையில் ஆன்லைனில் ஏராளாமானோர் விண்ணப்பித்தனர். இதில் சுமார் 4.50 லட்சம் பேர் விண்ணப்பித்ததாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், கடைசி நேரத்தில் ஒரே கட்டத்தில் பலர் விண்ணப்பிக்க முயன்றதால் சர்வர் முடங்கியதாகக் கூறப்படுகிறது. மேலும், பலருக்கு OTP பெறுவதில் சிக்கல் இருந்ததாகவும், இதனால் பலரால் உரியக் காலத்தில் விண்ணப்பிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து பி.எட். பட்டப் படிப்புக்கான முதலாம் ஆண்டு தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிடப்படாததால் அவர்களாலும் விண்ணப்பிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவினை நீட்டிக்குமாறு பலரும் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து வரும் ஏப்ரல் 26 வரை கால அவகாசத்தை நீட்டித்து உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு http://www.trb.tn.nic.in/ என்ற ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!