TET தேர்வு எழுதுபவர்கள் கவனத்திற்கு 2022 – ஆசிரியர் தேர்வு வாரியம் முக்கிய அறிவிப்பு!
ஆசிரியர் தகுதித் தேர்வை ஜூலை இறுதி வாரத்தில் அல்லது ஆகஸ்ட் மாதத்தில் நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவலை இந்த பதிவில் பார்ப்போம்.
TET தேர்வு தேதி அறிவிப்பு:
கொரோனா காலகட்டமான 2020 மற்றும் 2021 ம் ஆண்டுகளில் நாட்டில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு கல்வி உட்பட அனைத்தும் பாதிக்கப்பட்டது. அந்த வகையில் ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வானது ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு அதன் மூலம் திறமை வாய்ந்த ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள். இவ்வாறு திடீரென வந்த கொரோனா நோய் தொற்றால் ஆசிரியர் தேர்வு போன்ற எவ்வித அரசு தேர்வும் நடைபெறாமல் இருந்தது. அதன்படி, தற்போது கொரோனா தாக்கம் குறைந்து வரும் காரணத்தால் இந்த ஆண்டு டெட் தேர்வு தொடர்ந்து TNPSC தேர்வுகள் நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் மற்றும் தமிழ்நாடு தேர்வு வாரியம் அறிவித்திருந்தது.
LPG கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோரின் கவனத்திற்கு – உஜ்வாலா திட்டத்தில் புதிய மாற்றம்!
அதன்படி, குரூப் 2,2A போட்டி தேர்வுகளும் நடத்தப்பட்டன. அதன்படி, ஆசிரியர் தேர்வுக்கான அறிவிப்பு கடந்த மார்ச் 7ஆம் தேதி வெளியிடப்பட்டு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இடைநிலை ஆசிரியர்களுக்கு தாள்-1, பட்டதாரி ஆசிரியர்களுக்கான தாள்-2 இரண்டையும் சேர்த்து டெட் தேர்வுக்கு 6 லட்சத்து 33 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என தெரிவித்துள்ளனர். மேலும், தேர்வுக்கான அறிவிக்கையில் தேர்வு எப்போது நடத்தப்படும் எந்த முறையில் நடத்தப்படும் என்பது பற்றி குறிப்பிடாததால் விண்ணப்பதாரர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர்.
Exams Daily Mobile App Download
ஆனால், ஆசிரியர் தேர்வு வாரியம் அறிக்கையில், ஆசிரியர் தகுதித் தேர்வை ஜூலை மாத இறுதி வாரத்தில் அல்லது ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, 1 முதல் 8ம் வகுப்பு வரை பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு டெட் தேர்வு தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அதிக எண்ணிக்கையில் பணி ஓய்வு பெறுவதால் ஆசிரியர் பணியிடங்கள் அதிக அளவில் நிரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது