தமிழக அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பொது மாறுதல் கலந்தாய்வு!

0
தமிழக அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு - பொது மாறுதல் கலந்தாய்வு!
தமிழக அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு - பொது மாறுதல் கலந்தாய்வு!
தமிழக அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பொது மாறுதல் கலந்தாய்வு!

தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்கள் அதிகம் எதிர்பார்த்து வந்த பொது மாறுதல் கலந்தாய்வு குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கலந்தாய்வு:

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படவில்லை கடந்த ஜனவரி மாதம் பொதுத் தேர்வை கருத்தில் கொண்டு மேல்நிலை வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது. அப்போது கொரோனா இரண்டாம் அலை வேகமெடுத்ததால் மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் நடைபெறும் பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறவில்லை. தற்போது தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைந்ததை அடுத்து மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு அனைத்து வகுப்புகளுக்கும் நேரடி பாட வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

தமிழக ரேஷன் கடைகளில் மண்பானை விற்பனை? தொழிலாளர்கள் கோரிக்கை!

இந்த நிலையில் பொது மாறுதல் கலந்தாய்வை நடந்த ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனையடுத்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பொது மாறுதல் குறித்து வெளியிட்ட செய்தி குறிப்பில் அதிக ஆசிரியர்கள் கொண்ட பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களை வேறு பள்ளிகளுக்கு பணியிட மாறுதல் செய்ய வேண்டும். பொது மாறுதல் கலந்தாய்வில் 100 % பார்வைத்திறன் குறைபாடு உடைய ஆசிரியர்கள், 40 % பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள், மனவளர்ச்சி குன்றிய அல்லது உடல் ஊனமுற்ற குழந்தைகளின் பெற்றோர்கள், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஆசிரியர்கள், டயாலிசிஸ் சிகிச்சை, இதய அறுவை சிகிச்சை, புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், மூளை புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்கள் போன்றவர்களுக்கு சிகிச்சை பெறுவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் .

தமிழக அரசு வழங்கும் 15 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை – ‘முன் மாதிரி கிராம’ விருது!

மேலும் கலந்தாய்வில் விதவைகள், 40 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு முன்னுரிமை வழங்கலாம். புதிதாக பணியில் சேரும் ஆசிரியர்கள் 8 ஆண்டு கட்டாயம் ஒரே பள்ளியில் பணி செய்ய இருக்க வேண்டும். அதன் பின்னர் அவர்கள் பணியிட மாறுதலில் கலந்து கொள்ளலாம். நிர்வாக மாறுதலுக்கு அந்தத் துறை அலுவலர்களுக்கு அனுமதிக்கலாம். மேலும் புதிதாக பணியில் சேரும் ஆசிரியர்களுக்கு முன்னுரிமை கல்வி ஒன்றியங்களில் கட்டாயம் 5 ஆண்டுகள் பணிபுரிய வேண்டும்.என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!