தமிழகத்தில் ரேஷன் ஊழியர்களுக்கான முக்கிய அறிவிப்பு – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
தமிழகத்தில் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ரேஷன் கடைகள் மூலமாக மலிவான பொருட்கள் வழங்கப்படுகிறது. இந்த பொருட்கள் தரமற்றதாக உள்ளது என பல்வேறு புகார்கள் எழுந்துள்ளது. இதனை தடுக்க வழிகாட்டு நெறிமுறைகளை வழங்க உள்ளதாக அரசு திட்டமிட்டு வருகின்றது.
வழிகாட்டு நெறிமுறை
தமிழகத்தில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு அரிசி, கோதுமை, சர்க்கரை, பாமாயில், துவரம் பருப்பு உள்ளிட்ட பொருட்களை மலிவான விலையில் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இதையடுத்து தமிழகத்தில் அனைத்து நலத்திட்டங்களும் ரேஷன் கார்டு மூலமாக செயல்படுத்தப்படுகிறது. இதில் குறிப்பாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரேஷன் கடைகள் மூலமாக பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு பரிசு தொகுப்பில் 21 பொருட்கள் அடங்கிய தொகுப்பு அனைத்து ரேஷன் கடைகளுக்கும் அனுப்பப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.
மாநில அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – இனி TDS சலுகை! மத்திய நிதியமைச்சர் அறிவிப்பு!
இதில் பல பொருட்கள் மிகவும் தரமற்றதாக இருப்பதாகவும் அத்துடன் கலப்படமான பொருட்களாக இருப்பதாகவும் புகார்கள் எழுந்தன. அதனால் இதனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேரில் சென்று ஆய்வுகளை மேற்கொண்டார். இதனை தொடர்ந்து இந்த தரமற்ற பொருட்களை அனுப்பியதற்கு காரணமான அதிகாரிகள் மற்றும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார். அத்துடன் ரேஷன் கடைகளில் தரமான பொருட்களை வழங்குவதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
IPL 2022: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஏலத்தில் குறிவைக்கும் 18 வீரர்கள் – ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
மேலும் ரேஷன் கடைகளில் தரமான பொருட்களை வழங்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ரேஷன் பொருட்களின் தரம் குறித்து நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் கூட்டுறவு மற்றும் உணவு துறை அதிகாரிகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ரேஷன் கடைகளில் தூய்மை பணிகளை மேற்கொள்ள வேண்டும் அத்துடன் பொருட்களின் தரம் குறித்து கார்டுதாரர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் வைத்திருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் இடம்பெற்றுள்ளது.