தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – உணவு வழங்கல்துறை அமைச்சர்!
தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடையில் பாமாயில் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
ரேஷன் கடை:
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் அரசு மக்களுக்கு தேவையான பொருட்களை மலிவான விலையில் வழங்கி வருகிறது. மக்கள் உணவு வழங்கல் துறை மூலம் ரேஷன் அட்டைகளை பெற்று அதன் மூலம் மாதந்தோறும் குறைந்த விலையில் தங்கள் பகுதியில் உள்ள ரேஷன் கடைகள் மூலம் பொருட்களை பெறுகின்றனர். இந்த நிலையில் கடந்த மே மாதம் திமுக தலைமையிலான அரசு வாக்குறுதி அளித்தபடி 4000 ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. மேலும் இலவச மளிகை பொருட்களும் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது பொங்கல் பரிசுத்தொகுப்பும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் TET தேர்ச்சி பெற்றவர்கள் கவனத்திற்கு – போட்டித் தேர்வு ரத்து?
தற்போதைய அரசு உணவு வழங்கல் துறையில் தொடர் கவனம் செலுத்தி வருகிறது. அண்மையில் ரேஷன் கடைகளில் தரமற்ற பொருட்கள் வழங்கப்படுவதாக ரேஷன் அட்டைதாரர்கள் புகார் அளித்தனர். மேலும் சரியாக பொருட்கள் வழங்கப்படுவதில்லை என்று ரேஷன் கடை விற்பனையாளர்கள் மீது குற்றம் சாட்டினர். இதையடுத்து உணவு வழங்கல் துறை அமைச்சர் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டார். அனைத்து ரேஷன் கடைகளிலும் தரமான மற்றும் சரியான எடை அளவில் பொருட்கள் விநியோகம் செய்ய உத்தரவிட்டார்.
சென்னை: அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!
அதனை தொடர்ந்து தற்போது ரேஷன் கடைகளில் பாமாயில் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் முதல்வரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் பங்கேற்று பேசிய உணவு வழங்கல் துறை அமைச்சர், ரேஷன் கடைகளில் பாமாயில் தட்டுப்பாடின்றி கிடைக்க செய்ய ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. மேலும் ரேஷன் கடைகளில் பாமாயில் உட்பட அனைத்து அத்தியாவசிய பொருட்களும் இனி தட்டுப்பாடின்றி மக்களுக்கு கிடைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.