தமிழக அரசு ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்பு மீண்டும் ரத்து – மறு உத்தரவு வரும் வரை அமல்!
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக அரசு ஏற்பட்ட நிதி நெருக்கடியை சமாளிக்க அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பல்வேறு சலுகைகளை அரசு ரத்து செய்தது. இதில் குறிப்பாக ஈட்டிய விடுப்பை பணமாக மாற்றும் முறையையும் கடந்த 2020ம் ஆண்டு முதல் ரத்து செய்யப்பட்டது. தற்போது மறு உத்தரவு வரும் வரை தடை அமலில் இருக்கும் என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஈட்டிய விடுப்பு
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு வகையான தடுப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது. அதனால் அரசுக்கு கூடுதல் செலவினம் ஏற்பட்டதால் நிதி நெருக்கடி ஏற்பட்டது. அதன் காரணமாக அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த அகவிலைப்படி உயர்வு, நிலுவை தொகை, ஈட்டிய விடுப்பு உள்ளிட்ட பல்வேறு வகையான சலுகைகளை அரசு ரத்து செய்தது. கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து கடந்த 3% அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு 31% அகவிலைப்படியை பெற்று வருகின்றனர். இதே போல ரத்து செய்யப்பட்ட அனைத்து சலுகைகளும் ஒன்றன்பின் ஒன்றாக திரும்ப வழங்கப்படும் என்று அரசு ஊழியர்கள் எதிர்பார்த்த வண்ணம் இருந்தனர்
LPG கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு – பாதுகாப்பானதை தெரிந்து கொள்வது எப்படி?
இதில் குறிப்பாக தங்களுக்கு ஈட்டிய விடுப்பை பணமாக மாற்றும் முறையை மீண்டும் செயல்படுத்த அரசாணை வெளியாகும் என்று காத்திருந்தனர். ஏனெனில் இதன் மூலமாக கூடுதலாக 1 மாத சம்பளம் வரை அரசு ஊழியர்கள் பெற முடியும். அதாவது, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஆண்டுக்கு 15 நாட்கள் வரை விடுப்பு எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை எடுக்காதவர்களுக்கு ஆண்டின் முடிவில் 15 நாட்களுக்குரிய சம்பளம் எவ்வித பிடிப்பும் இன்றி வழங்கப்படும். இதனை 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை என 30 நாட்கள் அதன்படி இவர்கள் ஒரு மாத ஊதியமாக பெற முடியும்.
Exams Daily Mobile App Download
இதனை கடந்த 2020ம் ஆண்டு முதல் தற்போது வரை அரசு நிறுத்தி வைத்துள்ளது. இது குறித்த அறிவிப்புக்காக காத்திருந்த அரசு ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை தரும் வகையில் அரசாணை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் அரசாணையில், தமிழக அரசு ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்பை ஒப்படைப்பு செய்து பணம் பெறுவதை மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஊழியர்கள் மத்தியில் போராட்ட உணர்வை தூண்டுவதாக உள்ளது.