தமிழகத்தில் பொங்கல் சிறப்பு பேருந்திற்கு முன்பதிவு செய்தோர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!

0
தமிழகத்தில் பொங்கல் சிறப்பு பேருந்திற்கு முன்பதிவு செய்தோர் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் பொங்கல் சிறப்பு பேருந்திற்கு முன்பதிவு செய்தோர் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் பொங்கல் சிறப்பு பேருந்திற்கு முன்பதிவு செய்தோர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜனவரி 16ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் அந்நாளில் பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு செய்தவர்களின் கட்டணம் குறித்து அரசு போக்குவரத்து கழகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

டிக்கெட் முன்பதிவு:

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் இதனை கட்டுப்படுத்த புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி ஜனவரி 6ம் தேதி முதல் இரவு 10 மணியில் இருந்து அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த இரவு நேர ஊரடங்கு நேரத்தில் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் பொதுமக்கள் வெளிவர வேண்டும் என்று அறிவித்துள்ளது. மேலும் பொது போக்குவரத்து இந்நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் – அகவிலைப்படி (DA) நிலுவைத்தொகை? கணக்கீடு விவரங்கள் இதோ!

அத்துடன் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு உள்ளிட்ட நாட்களில் வழிபாட்டு தலங்கள் திறக்க தடை விதித்துள்ளது. அதன்படி வார இறுதி நாளான ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும் அறிவித்துள்ளது. முழு ஊரடங்கு நாளில் கார், ஆட்டோ, மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும். இந்நிலையில் வருகிற பொங்கல் தினத்தை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்ல விரும்பும் பயணிகள் பேருந்து டிக்கெட்டுக்கான முன்பதிவுகளை செய்ய வந்தனர். ஆனால் தற்போது ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்பதால் பொது போக்குவரத்து ரத்து செய்யப்படும்.

தமிழகத்தில் ஜன.14 பொங்கல் பண்டிகை – தொழிலாளர்களுக்கு தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை!

இதனை தொடர்ந்து வருகிற காணும் பொங்கல் அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஜனவரி 16ம் தேதியும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. அதனால் ஜனவரி 16ம் தேதி பேருந்து டிக்கெட்டுக்கான முன்பதிவு செய்தவர்கள் நிலை என்ன ஆகும்? என்ற கேள்வி பொது மக்கள் மத்தியில் எழுந்தது. இது குறித்து அரசு போக்குவரத்து கழகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, பொங்கல் முடிந்த ஜனவரி 16ம் தேதி அன்று பேருந்தில் பயணிக்க முன்பதிவு செய்தவர்களுக்கு டிக்கெட் கட்டணம் திருப்பி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!