தமிழக அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவிகளுக்கு முக்கிய அறிவிப்பு – அமைச்சர் தகவல்!
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை அறிவியல் கல்லூரிகளிலும் காலையில் மட்டுமே மாணவிகளுக்கு வகுப்புகள் நடத்த பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
அறிவியல் கல்லூரி:
தமிழகத்தில் இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா பரவல் அதிகமாக இருந்து வந்தது. கொரோனா பரவலின் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகத் தான் பாடத்திட்டங்கள் நடத்தப்பட்டு வந்தன. இதுமட்டுமல்லாமல் ஆன்லைன் மூலமாக தான் கல்லூரி மாணவர்களுக்கு தேர்வும் நடத்தப்பட்டது. ஆனால், பள்ளி மாணவர்களுக்கு எந்த பொதுத் தேர்வும் நடத்தப்படாமல் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது.
மீண்டும் அமலுக்கு வரும் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் – மாநில அரசு நடவடிக்கை!
இதனைத் தொடர்ந்து கொரோனா தொற்று தமிழகத்தில் குறைந்த காரணத்தினால் மீண்டும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. கல்லூரி மாணவர்களுக்கு ஜூன் மாதத்திலிருந்து அடுத்த செமெஸ்டருக்கான தேர்வும் நடைபெற இருக்கிறது. மேலும், பள்ளி மாணவர்களுக்கும் மே மாதத்திலிருந்து பொதுத் தேர்வு நடைபெற இருக்கிறது. பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்விற்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் மாணவர்கள் பீதியில் உள்ளனர்.
Exams Daily Mobile App Download
இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் காரணத்தினால் மீண்டும் பள்ளி, கல்லூரிகள் மூடப்படுமோ என மாணவர்கள் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். சென்னை ஐடிஐ மாணவர்கள் பலரும் கொரோனா பரவலினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை கல்லூரிகளில் மாணவிகளுக்கும் காலையில் மட்டுமே வகுப்பு நடத்தப்படும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். மேலும், மாலையில் மாணவர்களுக்கு வகுப்பு நடத்த பரிசீலனை செய்யப்பட்டு வருவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.