தமிழகத்தில் 8ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஜன.27 கடைசி நாள்!

0
தமிழகத்தில் 8ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு - ஜன.27 கடைசி நாள்!
தமிழகத்தில் 8ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு - ஜன.27 கடைசி நாள்!
தமிழகத்தில் 8ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஜன.27 கடைசி நாள்!

தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை அரசு செயற்படுத்தி வருகிறது. இதனை தொடர்ந்து 8ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகைக்கான அறிவிப்பை அரசு வெளியிட்டு உள்ளது. இது தொடர்பான கூடுதல் தகவல்களை பற்றி பார்க்கலாம்.

கல்வி உதவித்தொகை

தமிழகத்தில் கொரோனா காரணமாக பொதுமக்கள் பல்வேறு பொருளாதார ரீதியிலான பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்களை அரசு செயற்படுத்தி வருகிறது. அதில் குறிப்பாக மாணவர்களுக்கு உதவிபுரியும் வகையில் கல்வி உதவித்தொகையை வழங்கி வருகிறது. அத்துடன் தற்போது 8ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகைக்கான தேர்வு நடைபெற உள்ளது. இத்தேர்வு தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத்தின் மூலமாக மார்ச் 5ம் தேதி நடத்தப்படுகிறது

நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்? மாநில முதல்வர்களுடன் பிரதமர் நாளை முக்கிய ஆலோசனை!

இத்தேர்வில் 8ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் கலந்து கொள்ளலாம். இத்தேர்வினை குறித்து அரசுத் தோ்வுகள் இயக்குநா் சா.சேதுராமவா்மா அவர்கள் முக்கிய அறிவிப்பை வெளிட்டுள்ளார். இந்த அறிவிப்பின் படி தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி புரியும் பள்ளிகள் மற்றும் மாநகராட்சி மற்றும் நகராட்சி பள்ளிகள், ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிகளில் 8ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் மாணவ, மாணவிகளுக்கு என்எம்எம்எஸ் தேர்வு மார்ச் 5ம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என்று தெரிவித்தார்.

இரவு ஊரடங்கு மேலும் ஒரு மணி நேரம் நீட்டிப்பு – கொரோனா உச்சம் எதிரொலி!

அத்துடன் இத்தேர்வுக்கான விண்ணப்பங்களை வருகிற ஜனவரி 12ம் தேதி முதல் ஜனவரி 27ம் தேதி வரை இணையதளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த விண்ணப்பங்களை http://www.dge.tn.gov.in/ என்ற இணையதள முகவரி மூலமாக பதிவிறக்கம் செய்ய வேண்டும். மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தங்கள் தலைமை ஆசிரியர்களிடம் ஜனவரி 27ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இத்தேர்வுக்கான கால அவகாசம் நீட்டிக்கப்படாது என்றும் தெரிவித்துள்ளார். இந்த தேர்வுக்கான கட்டணத் தொகையான ரூ.50 செலுத்த வேண்டும்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!