திருப்பதி கோவில் செல்லுவோர் கவனத்திற்கு – டிக்கெட் குறித்த விவரங்கள்!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு வழக்கம் போல பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இதையடுத்து தற்போது அக்டோபர் மாதத்திற்கான ரூ.300 சிறப்பு தரிசனத்திற்கான டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
திருப்பதி:
ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வெளிநாடுகளில் இருந்தும் வெளியூர்களில் இருந்தும் தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள். ஆனால் கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இதில் குறிப்பாக இலவச தரிசனம், அங்கபிரதட்சணம் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து கொரோனா பரவல் குறைந்த பிறகு கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் அங்கப்பிரதட்சணம், இலவச தரிசனம் மேற்கொள்ளவும் கோவில் நிர்வாகம் அனுமதி அளித்தது.
Reliance Jio, Airtel பயனர்களுக்கான ஹாப்பி நியூஸ் – புதிய ரீசார்ஜ் பிளான் அறிமுகம்!
அதன்படி இம்மாதத்திற்கான அங்கப்பிரதட்சண டிக்கெட்டுகள் ஆன்லைன் வாயிலாக வெளியிட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 750 அங்கப்பிரதட்சண டிக்கெட்டுகள் வழங்கப்பட உள்ளது. மேலும், செப்டம்பர் 27ம் தேதி முதல் தொடங்கி 9 நாள்களுக்கு பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது. அதனால் இந்த தினத்தில் அங்கப்பிரதட்சண டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் ரூ.300க்கான சிறப்பு தரிசன டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்படும். அதன்படி நாள் ஒன்றுக்கு 25 ஆயிரம் டிக்கெட்டுகள் வெளியிடப்படும்.
அதன்படி ஒரு மாதத்திற்கு 6 லட்சம் டிக்கெட் வரை இணையதளத்தில் வெளியிடப்படும். அந்த வகையில் அக்டோபர் மாதத்தில் 24 நாட்களுக்கான சிறப்பு தரிசன டிக்கெட் கடந்த 18ம் தேதி காலை 9 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இந்த டிக்கெட் வெளியான 72 மணி நேரத்தில் அனைத்து டிக்கெட்டுகளையும் பக்தர்கள் முன்பதிவு செய்துவிட்டனர். இந்த 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ததின் மூலமாக தேவஸ்தானத்திற்கு ரூ.18 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்