திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிட்டுள்ளோர் கவனத்திற்கு – ஒரு டிக்கெட் ரூ.1.5 கோடி! தேவஸ்தானம் ஏற்பாடு!
திருப்பதியில் உதய அஸ்தமன சேவை என்ற என்ற சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான சிறப்பு திட்டத்தின் படி பூஜையில் பங்கேற்க 1 கோடி ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் முதல்கட்டமாக 531 டிக்கெட்டுகளை ஆன்லைனில் வெளியிட திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் திருக்கோயில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மாதங்களில் பக்தர்கள் வருகை மறுக்கப்பட்டது. சுவாமிக்கு பூஜைகள் கோயில் வளாகத்தில் உள்ள ஊழியர்கள் முன்னிலையில் நடைபெற்று வந்தது. அதிக இந்தியாவில் அதிக வருமானம் ஈட்டும் முக்கிய திருத்தலமாகும். இங்கு பக்தர்கள் வருகை மறுக்கப்பட்டதால் கோயில் வருமானமும் குறைந்தது. அரசின் முயற்சியால் கொரோனா தொற்று குறைந்து வந்ததால் முன்பதிவு அடிப்படையில் மீண்டும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
TNPSC தேர்வுகளுக்கான ஆன்லைன் வகுப்புகள் – தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு..!
இதற்காக மாதந்தோறும் https://tirupatibalaji.ap.gov.in என்ற இணயதளம் மூலம் 300 ரூபாய் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று முழுமையாக குறையாத நிலையில் பக்தர்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். மேலும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று தேவஸ்தானம் அறிவுறுத்தி வருகிறது. இந்த நிலையில் தற்போது தேவஸ்தானம் உதய அஸ்தமன சேவை என்ற பெயரில் . ஏழுமலையான் கோயிலில் காலை நடைபெறும் பூஜை முதல் இரவு நடைபெறும் ஏகாந்த சேவை வரை நாள் முழுவதும் கோயிலில் இருந்து பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது.
பிரபல வாகன உற்பத்தி நிறுவனத்தில் வேலை – முழு விவரங்களுடன்..!
திட்டத்தின் படி சாதாரண நாட்களில் பூஜையில் பங்கேற்க ஒரு கோடி ரூபாயும், வெள்ளிக்கிழமைகளில் பங்கேற்க ஒன்றரை கோடி ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கட்டணம் செலுத்துபவர் அடுத்த 25 ஆண்டுகளுக்கு உதய அஸ்தமன சேவையில் கலந்து கொள்ளலாம். முதல்கட்டமாக 531 டிக்கெட்டுகளை ஆன்லைனில் வெளியிட திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. டிக்கெட் பதிவு தொடங்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் வசூலிக்கப்படும் நிதியானது திருப்பதியில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் மேம்பாட்டிற்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.