திருப்பதிக்கு குடும்பத்துடன் தரிசனம் செல்ல உள்ளோர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!

0
திருப்பதிக்கு குடும்பத்துடன் தரிசனம் செல்ல உள்ளோர் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு!
திருப்பதிக்கு குடும்பத்துடன் தரிசனம் செல்ல உள்ளோர் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு!
திருப்பதிக்கு குடும்பத்துடன் தரிசனம் செல்ல உள்ளோர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!

திருப்பதியில் அடுத்த மாதம் வைகுண்ட ஏகாதசி நடைபெற உள்ளதால் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். இதனால் ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு கோவில் தேவஸ்தானம் தற்போது கூடுதல் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

பக்தர்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள்

கொரோனா தொற்று காரணமாக அனைத்து கோவில்களும் திறப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் வரவழைக்கப்பட்டுள்ளது. அதனால் அனைத்து கோவில்களும் தற்போது திறக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவில் திறக்கப்பட்டது. அதனால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க வருகை புரிகின்றனர். இந்நிலையில் அடுத்த மாதம் வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு ஜனவரி 13 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை இங்கு வைகுண்ட வாசல் என்று கூறப்படும் பரமபத வாசல் திறக்கப்பட உள்ளது.

தமிழக அஞ்சல் துறையில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு – நாளை கடைசி தேதி!

இதனால் அடுத்த மாதத்தில் மற்ற நாட்களில் நாள் ஒன்றுக்கு 10,000 என்று இலவச தரிசன டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலமாக வழங்க உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. ஆதலால் பக்தர்களின் நலன் கருதி கூடுதல் கட்டுப்பாடுகளை தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அதன்படி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் அனைவரும் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். அத்துடன் திருமலைக்கு வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அலிபிரி சோதனைச்சாவடியை கடக்கும் முன் 48 மணி நேரத்திற்கு முன்பு கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும்.

சபரிமலை தரிசனம் செல்ல திட்டமிட்டுள்ள பக்தர்கள் கவனத்திற்கு – டிச.31 முதல் மீண்டும் அனுமதி!

அத்துடன் பரிசோதனை முடிவில் நெகட்டிவ் என்று இருக்க வேண்டும். நெகட்டிவ் சான்றிதழையும் 2 டோஸ் செலுத்திய சான்றிதழையும் அங்குள்ள அதிகாரிகளிடம் காண்பிக்க வேண்டும். இவ்வாறு சான்றிதழை காண்பித்தவர்கள் மட்டுமே திருமலைக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர்கள் மட்டும் தான் ஏழுமலையானை தரிசிக்க முடியும் என்றும் தேவஸ்தானம் தனது அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் திருப்பதி செல்வோர் அனைவரும் இந்த விதிமுறைகளை கட்டாயமாக தெரிந்து கொள்ள வேண்டும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!