ஆதார் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – மத்திய அரசின் முக்கிய எச்சரிக்கை!
இந்தியாவில் முக்கிய அடையாள ஆவணமாக விளங்கும் ஆதார் அட்டையை நாம் அப்டேட்டாக வைத்து வைத்திருப்பது அவசியம். தற்போது வீட்டிலிருந்தபடியே அப்டேட் செய்யும் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களை இப்பதிவில் காண்போம்.
ஆதார் கார்டு:
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் அட்டையை வழங்கி வருகிறது. பிறந்த குழந்தைகளுக்கும் கூட ஆதார் எண் வழங்கப்படுகிறது இது பால் ஆதார் எனப்படுகிறது. தற்போது பிறந்த முதல் நாளே ஆதார் எடுக்கும் வசதியை ஆதார் அமைப்பு வழங்குகிறது. இதற்கு ஆவணமாக குழந்தையின் தாய், தந்தையின் ஆதார் அட்டை அவசியமாகும். அதனை தவிர்த்து தற்போது அனைத்து வேலைகளுக்கும் தேவைப்படுவதால் ஆதார் கார்டில் நாம் மொபைல் எண், புகைப்படம், முகவரி ஆகிய விவரங்களை நாம் எப்போதும் அப்டேட்டாக வைத்திருக்க வேண்டும்.
தமிழகத்தில் 15 காவல்துறை அதிகாரிகளுக்கான பதக்கங்கள் – அரசு அறிவிப்பு!
அதனை ஆன்லைன் வாயிலாகவும், நேரடியாகவும் அப்டேட் செய்யும் வசதியை UDAI அமைப்பு வழங்குகிறது. இவ்வாறு ஆதாரில் விவரங்களை மற்றும் போது ஆதாரில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு ஒரு OTP வரும் அதனை பதிவிட்டால் மட்டுமே விவரங்களை மாற்ற முடியும். இந்த OTP எண்ணை யாரிடம் பகிர கூடாது என்று மத்திய எச்சரித்துள்ளது. அதாவது ஓடிபி யை கேட்டு ஏதேனும் ஏஜென்சியில் இருந்து அழைப்பு, குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் வந்தால் அதை பொருட்படுத்த வேண்டாம்.
ஏனெனில் இதன் மூலம் மோசடி நடந்து வருகிறது. அதனால் OTP எண்ணை பகிர வேண்டாம். எப்போதும் UIDAI இணையதளத்தில் இருந்து மட்டுமே ஆதாரை பதிவிறக்கம் செய்ய வேண்டும். மேலும் உங்களின் ஆதாரை யாரேனும் தவறான முறையில் பயன்படுத்துவதை தவிர்க்க உங்களின் ஆதார் கார்டுகளைப் லாக் செய்து வைக்க வேண்டும். தேவைப்பட்டால் மட்டுமே அன்லாக் செய்யவும். மேலும் பாதுகாப்பை உறுதி செய்யும் வண்ணம் 16 இலக்க விஐடி என்கிற விர்ச்சுவல் எண்ணை பயன்படுத்த வேண்டும் UIDAI அறிவுறுத்துகிறது .