TCS நிறுவன ஊழியர்கள் கவனத்திற்கு – ‘இதை’ செய்தால் இனி பணிக்கு சிக்கல் தான்!
ஐடி நிறுவனமான டிசிஎஸ் தனது ஊழியர்கள் மூன்லைட்டிங் முறையில் ஈடுபடுவது குறித்த கருத்துக்களை வெளியிட்டுள்ளது. நிறுவனத்தின் இந்த அறிவிப்பு மிகவும் கவனிக்கத்தக்க வகையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மூன்லைட்டிங் முறை:
ஐடி நிறுவனமான டிசிஎஸ் 2023 நிதியாண்டின் முதல் பாதியான தற்போது 35,000 புதியவர்களை பணியமர்த்தியுள்ளது. இந்த 35,000 புதியவர்களில், 20,000 பேர் ஜூலை-செப்டம்பர் காலாண்டில் நியமிக்கப்பட்டவர்கள் ஆவார்கள். கடந்த நிதியாண்டின் முதல் பத்தியில் டிசிஎஸ் 43,000 புதியவர்களை பணியமர்த்தியது குறிப்பிடத்தக்கதாகும். 2022ம் நிதியாண்டில் மொத்தமாக 1 லட்சத்திற்கும் அதிகமானவர்களை நிறுவனம் நியமித்தது. ஆனால், 2023ம் நிதியாண்டில் 40,000 ஊழியர்களை பணியமர்த்த இலக்கு நிர்ணயித்து உள்ளதாக அறிவித்துள்ளது.
இந்நிலையில், கடந்த சில வாரங்களாக நாட்டில் மூன்லைட்டிங் முறை அதிக விவாதத்திற்கு உள்ளாகி வருகிறது. ஒரு ஊழியர் ஒரு நிறுவனத்தில் வேலை செய்து கொண்டே இன்னொரு நிறுவனத்திலும் மாலை நேரம், இரவு நேரம் அல்லது வார இறுதி நாட்களில் வேலை செய்வதுதான் மூன்லைட்டிங் முறை எனப்படுகிறது. நாட்டின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனர், ஊழியர்கள் இந்த நிறுவனத்தில் பணி வாய்ப்பு பெறும் போது போடப்பட்ட ஒப்பந்தத்தின் படி ஒரு ஊழியர் வேறு எந்த நிறுவனத்திலும் பணியாற்றுவது தடைசெய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்
இதை நீங்கள் செய்தால் ரூ.1 லட்சம் வரை சிறப்பு பரிசு – தமிழக அரசின் அட்டகாசமான அறிவிப்பு!
Exams Daily Mobile App Download
மூன்லைட்டிங் முறையானது, ஒரு நெறிமுறைப் பிரச்சினை என்றும் அது நிறுவனத்தின் முக்கிய மதிப்புகள் மற்றும் கலாச்சாரத்திற்கு எதிரானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், விப்ரோ நிறுவனம் சமீபத்தில் 300 ஊழியர்களை மூன்லைட்டிங் முறையில் ஈடுபட்டதற்காக பணிநீக்கம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்