தமிழகத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஹாப்பி நியூஸ் – திட்டம் மீண்டும் அமல்!
தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி முடிவடைந்து உள்ளதால், மீண்டும் ரேஷன் கடைகளில் கைரேகை வைத்து பொருட்கள் வாங்கும் முறை மீண்டும் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ்:
இந்திய குடிமகனின் முக்கிய ஆவணமாக உள்ள ரேஷன் கார்டு மூலம் ஏழை, எளிய மற்றும் நடுத்தர குடும்பத்தினர் பயன்பெறும் வகையில் ரேஷன் கடைகளில் மலிவு விலையில் அத்தியாவசியப் பொருட்கள் விற்கப்பட்டு வருகிறது. ரேஷன் அட்டை தற்போது டிஜிட்டல் வடிவத்திற்கு ஸ்மார்ட் கார்டாக மாற்றப்பட்டுள்ளது. இந்த வகையில் மாதந்தோறும் நியாய விலை கடைகளுக்கு வரும் ரேஷன் அட்டை அட்டைதாரர்கள், விற்பனை முனைய கருவிகள் மூலம் கைரேகை வைத்து பின்பு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் தமிழகத்தில் வசிக்கும் பிற மாநிலத்தவர்கள், வெளி மாநிலங்களில் வசிக்கும் தமிழக மக்களும் கைரேகை மூலம் ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்களை பெற்று வருகின்றனர். நடப்பு ஆண்டு பொங்கல் பண்டிகைக்காக, ரேஷன் அட்டைதாரர்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். முதல்வர் உத்தரவின் படி பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி அடிப்படையில் கைரேகை பதிவு நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் பிற மாநில ரேஷன் அட்டைதாரர்கள் அத்தியாவசியப் பொருட்கள் பெற முடியாமல் தவித்தனர். தற்போது பொங்கல் பரிசு தொகுப்பு பணி நிறைவு பெற்றுள்ளதால் மீண்டும் கைரேகை வைக்கும் முறை அமலுக்கு வரும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பு பிற மாநில குடும்ப அட்டைதாரரர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.