தமிழக அரசு ஊழியர்களுக்கு ஈடு செய்யும் விடுப்பு – வருகை சான்றிதழ் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தல்!
தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் விடுமுறை நாளில் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டால் அதற்கு ஈடாக மாற்று விடுப்பு எடுத்துக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வருகை சான்றிதழை பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஈடு செய்யும் விடுப்பு
தமிழகத்தில் உள்ள அரசுத்துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கணிசமான அளவு ஊதியத்துடன் சேர்த்து அகவிலைப்படி, ஓய்வூதியம் உள்ளிட்ட பல கூடுதல் சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனுடன் மகப்பேறு விடுப்பு, ஈடு செய்யும் விடுப்பு உள்ளிட்ட சில விடுமுறை தொடர்பான சேவைகளும் அரசு ஊழியர்களுக்கு கொடுக்கப்படுகிறது. இதில், குறிப்பாக அரசு ஊழியர்கள் பொது விடுமுறை நாட்களில் பணிபுரிந்தால் அவர்கள் வேறு நாட்களில் விடுமுறை எடுத்துக்கொள்ளும் வகையில் ஈடு செய்யும் விடுப்பு என்ற சலுகை நடைமுறையில் இருக்கிறது.
அந்த வகையில் அரசு ஊழியர்களுக்கு ஆண்டு தோறும் 20 நாட்களுக்கு ஈடு செய்யும் விடுப்பு அளிக்கப்படும். இந்த விடுப்பை அரசு ஊழியர்கள் தற்செயல் விடுப்பு மற்றும் அரசு விடுமுறை ஆகியவற்றுடன் சேர்த்து ஒவ்வொரு 6 மாதத்திலும் 10 நாட்களுக்கு மிகாமல் எடுத்துக்கொள்ளலாம். இந்த நிலையில் தமிழக அரசுப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஈடு செய்யும் விடுப்பு தொடர்பான சில வழிகாட்டு நெறிமுறைகள் சமீபத்தில் தமிழக அரசாங்கத்தால் வெளியிடப்பட்டது.
Exams Daily Mobile App Download
இது குறித்த அரசாணையில், ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பயிற்சிகள் வேலை நாளின் போது அமைந்தால் அவை பணிக்காலமாக கருதப்படும் என்றும், விடுமுறை நாளில் நடைபெறும் பயிற்சிக்கு ஈடாக மாற்று விடுப்பு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது பணி நாட்களில் நடைபெறும் பயிற்சிக்கு பதிலாக ஈடு செய்யும் விடுப்பு எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பயிற்சியில் கலந்துகொண்டு வரும் ஆசிரியர்கள் பயிற்சி மையத்தில் மறக்காமல் வருகைச் சான்றிதழை கேட்டு பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.