தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
நாடு முழுவதும் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு உடற்கல்வி பாடத்தை கட்டாயமாக்க வேண்டும் எனவும், அனைத்து பள்ளிகளிலும் ஏதேனும் இரண்டு விளையாட்டுகளை கட்டாயமாக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
உடற்கல்வி வகுப்புகள்:
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு உடற்கல்வி வகுப்புகள் இருக்கும். ஆனால், ஆசிரியர்கள் உடற்கல்வி வகுப்பின் போது அதற்குரிய பாடங்களை மாணவர்களுக்கு நடத்தாமல் கணிதம், அறிவியல் போன்ற பாடத்திட்டங்களை தான் ஆசிரியர்கள் நடத்தி வருகின்றனர். இதனால் மாணவர்களும் மனஉளைச்சலுக்கு தள்ளப்படுகின்றனர். இதுமட்டுமல்லாமல் மாணவர்களுக்கு விளையாட்டு துறையிலும் ஆர்வம் இல்லாமல் போய்விடுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா பரவலின் காரணமாக தமிழகத்தில் உள்ள எந்த பள்ளி, கல்லூரிகளும் திறக்கப்படவில்லை.
Post Office இல் சேமிப்பு கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – தவறாமல் படிங்க!
தற்போது தான் ஓரளவுக்கு கொரோனா பரவல் குறைந்து வந்த காரணத்தினால் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுமட்டும் அல்லாமல் இரண்டு ஆண்டுகளுமே பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் எதுவும் நடத்தவில்லை. இந்தாண்டு கண்டிப்பாக பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடத்தவேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. அதற்குண்டான பொதுத்தேர்வு அட்டவணையும் வெளியாகியுள்ளது. பொதுத்தேர்விற்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
ExamsDaily Mobile App Download
இந்நிலையில், தற்போது அடுத்த கல்வியாண்டில் இருந்து நாடு முழுவதும் 9 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு உடற்கல்வி பாடத்தை கட்டாயமாக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து 9 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு உடற்கல்வி பாடத்தில் இருந்து செய்முறை தேர்வுகள் மற்றும் எழுத்து தேர்வுகள் நடத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், அனைத்து பள்ளிகளிலும் ஏதேனும் இரண்டு விளையாட்டுகளை கட்டாயமாக்க வேண்டும் எனவும், வாரத்தில் இரண்டு நாட்கள் உடற்கல்வி வகுப்புகள் இருக்கும் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.