தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!

0
தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு - கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு - கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!

தமிழகம் முழுவதும் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் ஏப்ரல் 25 முதல் தொடங்கி உள்ளன. இதை தொடர்ந்து பொதுத்தேர்வுகளும் அடுத்த வாரம் தொடங்க உள்ளன. இந்நிலையில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் தேர்வு நடைபெறாது என்ற தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வி துறை விளக்கம் அளித்துள்ளது.

முக்கிய அறிவிப்பு:

சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பிறகு, இந்த தொற்று பாதிப்பு அசூர வேகத்தில் உலக நாடுகளில் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரம் எடுத்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டது. மேலும் கொரோனா ஊரடங்கு தொடர்ந்து 18 மாதங்கள் இருந்த நிலையில், ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் படிப்படியாக குறைந்தது. இதையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டன.

மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் சம்பள உயர்வு? ஃபிட்மென்ட் காரணி அதிகரிப்பு!

பின்னர் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வெகுவாக குறைந்த நிலையில்,நவம்பர் மாதம் முதல் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. மேலும் ஜனவரி மாத இறுதியில் தமிழகத்தில் ஒமைக்ரான் மற்றும் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் இருந்தது. இதனால் மீண்டும் பள்ளி,கல்லூரிகள் மூடப்பட்டன. இதை தொடர்ந்து இரவு ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு ஆகிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. தொடர்ந்து சுகாதாரதுறையின் பெரும் முயற்சியால் ஓமைக்ரான் தொற்று கட்டுக்குள் வந்தால் அனைத்து கல்வி நிறுவனங்களும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் கட்டாயம் நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்தது. இதன் அடிப்படையில் வரும் வாரம் பொதுத்தேர்வு நடைபெற உள்ளன.

Exams Daily Mobile App Download

இதை தொடர்ந்து 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்புகளுக்கு தேர்வுகள் மே 5ம் தேதி முதல் 13ம் தேதி வரை நடக்கும். நடப்புக் கல்வி ஆண்டுக்கான கடைசி வேலை நாள் மே 13ம் தேதி வரை என்றும், நடப்பு கல்வி ஆண்டின் இறுதியுடன் தொடர்புடைய மற்ற அனைத்து நடவடிக்கைகளும் தற்போதுள்ள நடைமுறைகளின்படி 1 முதல் 5ம் வகுப்புகளுக்கு மேற்கொள்ளப்படும் என்று முன்னதாகவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா தொற்று மீண்டும் தலைதூக்கி உள்ளதால், 1 முதல் 9ம் வகுப்புகளுக்கு தேர்வு நடக்காது என்ற போலியான தகவல்கள் இணையத்தில் பரவி வருகிறது. இந்த வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம், 1 முதல் 12 வகுப்புகளுக்கு கட்டாயம் ஆண்டுத் தேர்வு மற்றும் பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 10,11,12ஆம் வகுப்புகளுக்கு இந்த ஆண்டு மொத்தம் 26,76, 675 மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!