தமிழக அரசு ஊழியர்களுக்கு அதிரடி அறிவிப்பு – தலைமை செயலர் உத்தரவு!

0
தமிழக அரசு ஊழியர்களுக்கு அதிரடி அறிவிப்பு - தலைமை செயலர் உத்தரவு!
தமிழக அரசு ஊழியர்களுக்கு அதிரடி அறிவிப்பு - தலைமை செயலர் உத்தரவு!
தமிழக அரசு ஊழியர்களுக்கு அதிரடி அறிவிப்பு – தலைமை செயலர் உத்தரவு!

தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் புதிதாக பணியில் சேரும் ஊழியர்களுக்கு வசதியாக இனி அனைத்து அலுவலர்களும் மாவட்ட அலுவல் கையேட்டை புதுப்பிக்க வேண்டும் என தமிழக தலைமை செயலர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.

அலுவல் கையேடு

தமிழகத்தில் கடந்த மே மாதத்தில் புதிய முதல்வராக முக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு அரசுத்துறைகளில் பல புதிய மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளார். குறிப்பாக பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடத்தவும் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு திட்டமிட்டு வருகிறது. இது தவிர தமிழகத்தில் உள்ள அனைத்து பொது மக்களுக்கும் பயன்படும் வகையில் சில சிறப்பு சலுகைகளையும் அரசு அறிவித்து வருகிறது.

தமிழகத்தில் 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு – அரசுத் தேர்வுகள் இயக்கம்!

அதே போல தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக இறையன்பு அவர்கள் பதவி வகித்து வரும் நிலையில், அரசு அலுவலகங்களை பராமரிப்பது, மாவாட்டங்கள் தோறும் பொது மக்களின் குறைதீர்க்கும் நடவடிக்கையை மேற்கொள்வது, செலவுகளை கட்டுப்படுத்துவது, முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளத்தை மேம்படுத்துவது போன்ற பல்வேறு சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

அந்த வரிசையில் தற்போது அனைத்து அரசு அலுவலகங்களிலும் மாவட்ட அலுவல் கையேட்டை புதுப்பிக்க வேண்டும் என புதிய உத்தரவை பிறப்பித்து மீண்டுமாக கவனம் ஈர்த்துள்ளார். இது தொடர்பாக வருவாய் நிர்வாக ஆணையாளர் கே.பணீந்திர ரெட்டிக்கு தலைமை செயலர் எழுதியுள்ள கடிதத்தில், ‘தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுத் துறைகளிலும் புதிதாக சேரும் அலுவலர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட அனைவருக்கும் வழிகாட்டு நெறிமுறைகள் இடம்பெற்றுள்ள மாவட்ட அலுவல் கையேடு வழங்கப்படுவது அவசியம் ஆகும்.

வங்கிகளில் Personal Loan வாங்க திட்டமா? 5 லட்ச ரூபாய்க்கான வட்டி விகித விவரம்!

இந்த கையேடு நடைமுறை கடந்த 1973 ஆம் ஆண்டுக்கு பின் இதுவரை புதுப்பிக்கப்படவில்லை. அதனால் சம்பந்தப்பட்ட நிர்வாகங்கள் மற்றும் வருவாய்த்துறை மாவட்ட அலுவல் கையேட்டை புதுப்பிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் அரசுத்துறையில் புதிதாக சேரக் கூடிய ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் அந்த பணிக்கான நோக்கத்தை தெரிந்து கொள்ள முடியும். இது தொடர்பான சந்தேகங்களை அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையத்திடம் கேட்டு தெளிவு பெற்றுக்கொள்ளலாம்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!