சபரிமலை தரிசனம் செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – நடை திறப்பு குறித்த முக்கிய அறிவிப்பு!
கேரள மாநிலத்தில், உலகப் புகழ்பெற்ற ஐயப்பன்கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து இருமுடி கட்டி சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் ஆனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட உள்ளது. எனவே தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் கண்டிப்பாக மாஸ்க் அணிந்து வருமாறு திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் வேண்டுகோள் விடுத்துள்ளது.
நடை திறப்பு:
கொரோனா கட்டுப்பாடுகள் விலக்கி கொள்ளப்பட்ட பிறகு வழிபாட்டு தளங்களுக்கு செல்ல கூடுதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு திருவிழாக்களில் கலந்து கொள்ள லட்சக்கணக்கில் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதும் திடீரென வேகமெடுக்கும் கொரோனா பரவல் – ஒரே நாளில் 5000+ பேருக்கு தொற்று உறுதி!
இது தவிர ஒவ்வொரு தமிழ் மாத முதல் நாளிலும் கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். அதன்படி வைகாசி மாத பூஜைக்காக கோவில் நடை கடந்த 14ம் தேதி திறக்கப்பட்டது. மேலும் 14-ந்தேதி மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. இதை அடுத்து மறுநாள் 15-ம் தேதி அதிகாலை முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். அன்று முதல் 19-ம் தேதி வரை நடை திறந்து இருந்தது. இந்த வைகாசி மாத பூஜையில் அதிக அளவில் பக்தர்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Exams Daily Mobile App Download
இந்நிலையில், ஆனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 14 ஆம் தேதி திறக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனிடையே, பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு இன்று மாலை 5.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. நாளை வியாழக்கிழமை பிரதிஷ்டை தின சிறப்பு வழிபாடு பூஜைகள் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் நடைபெறும். மேலும் இரவு 10.30 மணிக்கு நடை அடைக்கப்படும். வழக்கம் போல் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். மேலும் பக்தர்களின் வசதிக்காக நிலக்கல் பகுதியில் உடனடி தரிசன முன்பதிவு வசதி செய்யப்பட்டுள்ளது.