அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – இனி பொருட்களின் எடையை ஏமாற்ற முடியாது!

0
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் - இனி பொருட்களின் எடையை ஏமாற்ற முடியாது!
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் - இனி பொருட்களின் எடையை ஏமாற்ற முடியாது!
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – இனி பொருட்களின் எடையை ஏமாற்ற முடியாது!

மத்திய அரசு இலவச ரேஷன் பொருட்களுக்கான கால அவகாசத்தை செப்டம்பர் மாதம் வரை நீட்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், ரேஷன் கடை ஊழியர்கள் எந்த வித மோசடியிலும் தற்போது ஈடுபட முடியாத அளவுக்கு மத்திய அரசு சில நடவடிக்கைகளை எடுத்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரேஷன் கார்டு:

தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும்,ரேஷன் அட்டைதாரர்களின் குடும்பங்களுக்கு உணவு தானியங்கள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் மக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்தின் மூலமாக பல ஏழை,எளிய குடும்பங்களை சேர்ந்த மக்கள் பயன்பெறுகின்றனர். ரேஷன் கார்டு என்பது பொருட்களை வாங்க மட்டும் இல்லாமல் ஒரு அடையாள ஆவணமாகவும் பயன்படுகிறது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலையில் அகவிலைப்படி (DA) உயர்வு – விரைவில் வெளியாகும் அறிவிப்பு?

மேலும், சமீப காலமாக ரேஷன் கடைகளில் சில மோசடிகள் நடைபெறுவதாக மத்திய அரசுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் மத்திய அரசு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரேஷன் கார்டில் தற்போது புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. அதாவது ரேஷன் அட்டைதாரர்கள் ஆறு மாதங்களாக ரேஷன் பொருட்களை வாங்காமல் இருந்தால், அவர்களுடைய ரேஷன் அட்டை ரத்து செய்யப்படும் என தற்போது அறிவித்திருந்தது. அதுமட்டுமல்லாமல், மலிவு விலையில் கிடைக்கும் ரேஷன் பொருட்களை தேவையில்லை என்ன நினைத்தாலோ அல்லது ரேஷன் வாங்க தகுதி இல்லாதவராக இருந்தாலும் இதை சட்டவிரோத விதிமுறையாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.

Exams Daily Mobile App Download

ரேஷன் கடைகளில் பயனாளிகளுக்கு உணவு தானியங்களை எடை போடும் போது, எடை குறைக்கப்படுவதை தடுக்கவும் அரசு நடவடிக்கையை எடுத்துள்ளது. அதன்படி, தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சரியான அளவு பொருள் வழங்குவதை உறுதி செய்வதற்காக, மத்திய அரசு, ரேஷன் கடைகளில் எலக்ட்ரானிக் பாயிண்ட் ஆஃப் சேல் உபகரணங்களை மின்னணு தராசுகளுடன் இணைப்பதற்கான உணவுப் பாதுகாப்புச் சட்ட விதிகளில் திருத்தங்களை செய்துள்ளது. இந்த என்எப்எஸ்ஏ- இன் சட்டத்தின் பிரிவு 12 இன் கீழ், உணவு தானியங்களுக்கான செயல்முறையை சீர் திருத்துவதற்கான செயல்பாட்டை முன்னெடுத்துச் செல்லும் முயற்சியே இந்த திருத்தம் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!