தமிழக ரேஷன் அட்டைதார்களுக்கு ஷாக் நியூஸ் – அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

0
தமிழக ரேஷன் அட்டைதார்களுக்கு ஷாக் நியூஸ் - அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
தமிழக ரேஷன் அட்டைதார்களுக்கு ஷாக் நியூஸ் - அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
தமிழக ரேஷன் அட்டைதார்களுக்கு ஷாக் நியூஸ் – அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட ரேஷன் அட்டைதாரர்களுக்கு மட்டும் ரேஷன் பொருட்கள் வழங்கும் வகையில் விரைவில் உத்தரவு பிறப்பிக்க உள்ளதாக தமிழக பதிவுத்துறை மற்றும் வணிக வரித்துறை அமைச்சர் பி. மூர்த்தி அவர்கள் தகவல் வெளியிட்டுள்ளார்.

ரேஷன் பொருட்கள் நிறுத்தம்:

நாடு முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று தீவிரமாக பரவியது. இந்த கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அந்த வகையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்த தடுப்பூசியானது 18 வயதிற்கும் மேற்பட்ட அனைவருக்கும் 2 தவணைகளாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் இன்று (டிச.06) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!!

இந்த தடுப்பூசி செலுத்தும் பணியானது கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கப்பட்டு இதுவரை 117 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நாடு முழுவதும் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் விதமாக மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கிராமப்புற மக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் விதமாக கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. ஆனாலும் இன்னும் பலர் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் அலட்சியம் காட்டி வருகின்றனர்.

தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளி விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு! கனமழை எதிரொலி!

அவ்வாறு அலட்சியமாக தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் உள்ளவர்களை தடுப்பூசி செலுத்த கட்டாயப்படுத்தும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு மட்டும் ரேஷன் பொருட்கள் வழங்கும் விதமாக விரைவில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தமிழக பதிவுத்துறை மற்றும் வணிக வரித்துறை அமைச்சர் பி. மூர்த்தி அவர்கள் தகவல் வெளியிட்டுள்ளார். தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு முதல் முறை எச்சரிக்கை விடுக்கப்படும். அதன் பின்னரும் தடுப்பூசி செலுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!