தமிழகத்தில் 10 முதல் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்கள் கவனத்திற்கு – முக்கிய உத்தரவு!
தமிழகத்தில் தற்போது 10, 11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு நடந்து வரும் அரசு பொதுத்தேர்வில் பங்கேற்காத 1.18 லட்சம் மாணவர்களின் நிலை குறித்து அறிக்கை சமர்ப்பிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
பொதுத்தேர்வு:
தமிழகத்தில் கடந்த வருடம் பரவிய கொரோனா இரண்டாம் அலையின் காரணமாக 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதனால் மாணவர்களுக்கு மதிப்பிட்டு முறையிலான மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. நடப்பு ஆண்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருவதால் பொதுத்தேர்வுகளை நடத்த பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டது. இதற்கான கால அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5ம் தேதி பொதுத்தேர்வு தொடங்கியது. 10ம் வகுப்புகளுக்கு மே 6ம் தேதி தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.
ரயில் பயணிகளின் கவனத்திற்கு – பராமரிப்பு பணியால் குறிப்பிட்ட சேவைகள் ரத்து!
இதுவரை நடைபெற்ற 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் ஆப்சென்ட் ஆன மாணவர்களின் எண்ணிக்கை 1.18 லட்சமாக உள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது. 10ம் வகுப்பு பயிலும் 12 லட்சம் பேரில் 42,000 பேரும் 11ம் வகுப்பில் தேர்வு எழுதிய 9 லட்சம் பேரில் 43,533 பேரும் 12ம் வகுப்பில் 10 லட்சம் பேரில் 1,18,133 மாணவர்களும் ஆப்சென்ட் ஆகியுள்ளனர். கொரோனாவிற்கு முன் வரை நடந்த அரசு தேர்வுகளில் இறப்பு, இடைநிற்றல் போன்ற காரணங்களால் மாணவர்கள் தேர்வை எழுதாமல் இருப்பர்.
Exams Daily Mobile App Download
ஆனால் இந்த வருடம் தேர்வு எழுத தகுதி பெற்ற 31 லட்சம் பேரில் 1.18 லட்சம் மாணவர் தேர்வுக்கு வரவில்லை. இந்த நிலையில் தேர்வுக்கு ஆப்சென்ட் ஆன மாணவர்களின் நிலை குறித்து அறிக்கை சமர்ப்பிக்க பள்ளிக் கல்வித்துறை மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து இடைநிற்றலை தவிர்க்கும் நோக்கில் பள்ளிக்கு தொடர்ந்து வராத மாணவர்கள் விபரம், வேலைக்கு சென்றால் அவர்களை பள்ளிக்கு அழைத்து வருதல், பிற காரணங்களை அறிந்து பள்ளிக்கு வர வைத்தல் மற்றும் விவரங்களை சேகரிக்கும் பணிகளையும் ஆட்சியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.