மத்திய அரசின் PM KISAN கிரெடிட் கார்டு வைத்துள்ள விவசாயிகள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!
மத்திய அரசு நாட்டில் உள்ள விவசாயிகளுக்கு உதவும் வகையில் செயல்படுத்தப்படும் பல திட்டங்களில் ஒன்றான கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தின் மூலம் விவசாயிகள் அனைவரும் வட்டி இல்லாமல் கடன் பெறலாம் என்ற தகவல் பரவி வருகிறது.
கிசான் கிரெடிட் கார்டு:
நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தை காப்பாற்றும் விவசாயிகள் அனைவரும் நல்ல முறையில் தங்கள் விவசாயத்தை செய்து வருவதற்கு உறுதுணையாக மத்திய மற்றும் மாநில அரசுகள் அனைத்தும் பல நலத்திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. விவசாயிகளுக்கு மானிய விலையில் உரம், விதைகள் போன்ற தேவையான பொருட்களை வழங்கி வருகிறது. இதனால் லட்சக்கணக்கான விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். இதுபோல பிரதமர் கிசான் யோஜனா திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு ரூ.6,000 விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.
இந்நிலையில், கிசான் கிரெடிட் கார்டின் மூலமாக விவசாயிகள் வட்டி இல்லாமல் கடன் பெறலாம் என்ற செய்தி பரவி வருகிறது. ஆனால் அவை முற்றிலும் தவறானது ஆகும். அவசர தேவைக்காகக் கடன் பெறவும், வேளாண் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளவும் கிசான் கிரெடிட் கார்டு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. இதன் மூலம் குறைந்த வட்டியில், செயல்முறை கட்டணங்கள் மற்றும் மற்ற கூடுதல் கட்டணங்களை தவிர்த்து கடன் வழங்கப்படுகிறது. இதன் மூலம் 2 முதல் 4% வட்டியில் விவசாயிகள் கடன் பெறலாம்.
பெறுவதற்கான வழிமுறைகள்:
நீங்கள் எந்த வங்கியின் மூலம் கிசான் கிரெடிட் கார்டினை பெற விரும்புகிறீர்களோ? அந்த வங்கியின் இணையதளத்தில் கிசான் கார்டுக்கான விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து அதைப் பூர்த்தி செய்த பின்னர் வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும். வங்கி ஒப்புதல் அளித்த பின்னர் உங்களின் கிசான் கிரெடிட் கார்டு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படும்.
Exams Daily Mobile App Download
மேலும் இதற்காக நில ஆவணங்கள் மற்றும் பயிர் விவரங்களையும் விண்ணப்பத்தில் சேர்க்க வேண்டும். கூடுதலாக, நில ஆவணத்தின் நகலையும், ஆதார் அட்டை, பான் அட்டை, 100 நாள் வேலைத் திட்டத்துக்கான அட்டை, வாக்காளர் அட்டை போன்ற ஏதேனும் ஒரு ஆவணத்துடன் சேர்த்து, நில ஆவணங்கள், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ போன்ற ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.