ஊட்டி சுற்றுலா செல்பவர்களுக்கு ஒரு குட் நியூஸ் – தெற்கு ரயில்வே சூப்பர் அறிவிப்பு!
நீலகிரி மாவட்டம் ஊட்டி மலைகளின் அரசி என அழைக்கப்படுகிறது. கோடைகாலத்தில் மட்டும் அல்லாமல் உதகையில் உள்ள இயற்கை அழகை கண்டு ரசிக்க நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து கொண்டு இருக்கின்றனர். கோடை காலம் என்றாலே சுற்றுலா பயணிகளின் எண்ணத்தில் முதலில் வருவது ஊட்டி, கொடைக்கானல் தான்.
சுற்றுலா பயணிகள்
கடந்த 2 வருட காலமாக கொரோனாவால் அதிகமான இடங்களில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் கோடை விடுமுறையை சமாளிக்க முடியாமல் மக்கள் திணறி வந்தனர். அதன்படி, கொரோனா குறைந்த நிலையில் சுற்றுலா தலங்களுக்கு மக்கள் வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அதிகமான மக்கள் கோடை விடுமுறை மற்றும் கோடை வெயிலை சமாளிப்பதற்காக ஊட்டிக்கு செல்கிறனர். கடந்த சில வாரங்களாக ஊட்டி வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
நடிகர் விஜய் விரும்பி பார்க்கும் விஜய் டிவி ஷோ எது தெரியுமா? சிவாங்கி சொன்ன சூப்பர் தகவல்!
ஊட்டியில் உள்ள மிக முக்கியமான சுற்றுலாத் தலங்களான ஊட்டி மலை ரயில் பொம்மை, ஊட்டி ஏரி, தாவரவியல் பூங்கா, ரோஜா தோட்டம், தொட்டபெட்டா சிகரம், டால்பின் மூக்கு, எமரால்டு ஏரி, புலிமலை, கோத்தகிரி, அன்னமலை கோவில், கேத்ரின் நீர்வீழ்ச்சி உள்ளிட்ட ஏராளமான இடங்களை கண்டு ரசிக்க மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இயக்கப்பட்ட மலை ரயில் சேவையானது தற்போது தளர்வுகளுடன் இயக்கப்பட்டு வருகிறது.
Exams Daily Mobile App Download
அதன்படி, ஊட்டி மலை ரயில் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கொரோனாவுக்கு முன்பு இயக்கப்பட்டது போல் மே 1ம் தேதி முதல் முன்பதிவு இல்லாத ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. அதன்படி, உதகமண்டலம்(ஊட்டி) முதல் குன்னூர் செல்லும் ரயில்(06140) உதகையில் இருந்து மாலை 5.30 மணிக்கு புறப்படும் என்று இந்த ரயிலில் 2 முன்பதிவில்லா பெட்டிகளில் மே 1ம் தேதி முதல் இணைக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. அதேபோல், குன்னூரில் இருந்து ஊட்டிக்கு வரை இயக்கப்படும் ரயில் எண்(06141) ஊட்டியில் மதியம் 12:15 மணிக்கு புறப்படுகிறது. இதில், 2 பெட்டிகள் முன்பதிவில்லாத பெட்டிகள் மே 4ம் தேதி முதல் இணைக்கப்படுகிறது.