தமிழகத்தில் புறநகர் ரயில்களில் புதிய வசதி அறிமுகம் – ரயில்வே அதிகாரிகள் தகவல்!
தமிழகத்தில் ரயில்களில் பயணிப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது ரயில்களில் பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது புதிய திட்டம் குறித்து ரயில்வே துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
ரயில்வே துறை:
தமிழகத்தில் பொது போக்குவரத்துகளில் ஒன்றான ரயில்களில் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பயணித்து வருகின்றனர். மேலும் பயணிகளின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை ரயில்வே துறை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது புறநகர் மின்சார ரயில்களில் பயணிகளுக்கு கூடுதலாக வசதிகளை மேம்படுத்த ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது. இதில் முதற்கட்ட நடவடிக்கையாக புறநகர் ரயில்களில் குளிர்சாதன வசதியுடன் கூடிய மின்சார ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.
இவ்வாறு குளிர்சாதன பெட்டிகள் அறிமுகப்படுத்த வேண்டுமெனில் சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியமானதாகும். அதாவது, மெட்ரோ ரெயிலில் இருப்பது போல பயணிகள் குறிப்பிட்ட நேரத்திற்குள் பெட்டிக்குள் சென்றவுடன் கதவு தானாக மூடிக் கொள்ள வேண்டும். ரயில் நிலையத்தில் ஒரே வழியில் வருவது மற்றும் மற்றொரு பாதையில் வெளியேறுவது உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த வேண்டும். இதே போல் பயணிகள் குறிப்பிட்ட நேரத்திற்குள் ஏறுவது, இறங்குவது உள்ளிட்டவற்றிற்கான வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
அலர்ட் மக்களே.. நாளை (அக்.11) இந்த ஏரியால Power off – வேலையெல்லாம் இப்போவே முடிச்சிருங்க!
Exams Daily Mobile App Download
முதற்கட்டமாக மும்பையில் குளிர்சாதன வசதியுடன் கூடிய மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக சென்னை கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு வழித்தடத்தில் இயங்கி கொண்டிருக்கும் மின்சார ரயில்களில் குளிர்சாதன பெட்டிகள் பொருத்த ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது. இதையடுத்து, இதற்கான சாத்திய கூறுகள் உள்ளனவா? என ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி சென்னையில் 2023 மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் மின்சார ரயில்களில் குளிர்சாதன பெட்டிகள் பொருத்தப்படும் என ரயில்வே துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்