CBSE 10ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – 2ம் பருவத்தேர்வு குறித்த விபரங்கள்!
தமிழகத்தில் தற்போது கொரோனா பெருந்தொற்றின் தாக்கம் குறைந்துள்ளதால் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடத்த போவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் படித்துவரும் 10 ஆம் வகுப்புக்கு இன்றுடன் முதல் பருவத்தேர்வு நடைபெற்றது.
2ம் பருவத்தேர்வு
தமிழகத்தில் கொரோனா தொற்றின் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் சென்ற வருடம் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. ஆனால் தற்போது கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்துள்ளது. அதனால் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டன. மேலும் பாடத்திட்டங்கள் 35 முதல் 50 சதவீதம் வரை குறைக்கப்பட்டது. அத்துடன் ஒவ்வொரு மாதமும் நடத்த வேண்டிய பாடப்பகுதிகள் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பப்படும். அதனை முறையாக ஆசிரியர்கள் நடத்தி வருகின்றனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – அகவிலைப்படி (DA) விரைவில் அதிகரிப்பு!
அத்துடன் சிபிஎஸ்இ பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு பொதுத் தேர்வு இரண்டு பருவ தேர்வுகளாக நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து நவம்பர் மாதம் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் பருவத்தேர்வு நடத்தப்பட்டு இன்றுடன் முடிக்கப்பட்டுள்ளது. இந்த முதல் பருவத் தேர்வானது சரியாக பதிலை தேர்வு செய்யும் எம்சிக்யூ முறையில் நடைபெற்றது. மேலும் 2022ஆம் ஆண்டு மார்ச் – ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் இரண்டாம் பருவத் தேர்வானது வினாக்களுக்கு விடை எழுதும் முறையிலும் தலா 50 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.
ஆதார் கார்டில் முகவரி, DOB விபரங்களை மாற்ற விரும்புவோர் கவனத்திற்கு – முக்கிய தகவல்!
மேலும் இந்த முதல் பருவத்தேர்வு ஒன்றரை மணி நேரம் நடத்தப்பட்டிருக்கிறது. அத்துடன் இரண்டாம் பருவத் தேர்வு இரண்டு மணி நேரம் நடத்தப்படும். இந்நிலையில் கொரோனா 3-வது அலை தீவிரமாக இருந்தால் பள்ளிகளில் 2வது பருவ தேர்வு நடத்த முடியாது. அந்த வேளையில் சரியான பதிலை தேர்வு செய்யும் எம்சிக்யூ வடிவில் தேர்வை நடத்தி கொள்ளலாம். இத்தேர்விற்கு 90 நிமிட நேரம் வழங்கப்படும். 2ம் பருவ தேர்வுக்கான பாடங்கள் சிபிஎஸ்இ இணையதளத்தில் சென்று பாடத்திட்டங்களை பார்த்து, இரண்டாம் பருவத் தேர்வுக்கு மாணவர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கின்றன