CBSE 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கருணை மதிப்பெண்கள் கிடையாது!
சி.பி.எஸ்.இ 12ம் வகுப்பு மாணவர்களுக்கான கணக்கு பதிவியல் முதல் செமஸ்டர் பொதுத்தேர்வு வரை வினாத்தாளில் ஏதேனும் தவறு இருப்பதால் கருணை அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும் என்று பரவி வரும் தகவல் போலியானது என்று மத்திய கல்வி வாரியம் தெரிவித்துள்ளது.
சி.பி.எஸ்.இ:
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலால் கடந்த கல்வியாண்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெறவிருந்த பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. முதலில் மத்திய கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ பொதுத்தேர்வுகளை ரத்து செய்வதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து அனைத்து மாநிலங்களும் மாணவர்களின் நலன் கருதி பொதுத்தேர்வுகளை ரத்து செய்தது. மாணவர்களுக்கு மதிப்பெண் முறையிலான மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. தற்போது அரசின் முயற்சியால் கொரோனா தாக்கம் குறைந்து வருவதை அடுத்து 2021-2022ம் கல்வியாண்டில் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
தமிழக கூட்டுறவு வங்கியில் சிறப்பு கடன் முகாம் – பொதுமக்கள் கவனத்திற்கு!!
இந்த நிலையில் மத்திய கல்வி வாரியம் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு பொதுத்தேர்வுக்கு பதிலாக இரண்டு பருவத் தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டாம் பருவத்தேர்வு முடிந்த பிறகு இரண்டு தேர்வு முடிவுகளும் சேர்த்து அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது முதல் செமஸ்டர் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான கணக்கு பதிவியல் முதல் செமஸ்டர் பொதுத்தேர்வு வரை வினாத்தாளில் ஏதேனும் தவறு இருப்பதால் கருணை அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும் என்ற போலியான தகவல் பரவி வருகிறது.
6ம் முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் திறப்பு? பள்ளிக்கல்வித்துறை விளக்கம்!!
கணக்குப் பதிவியல் பாடத்துக்கான தேர்வு நடைபெற்று முடிந்த நிலையில் சி.பி.எஸ்.இ தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியின் பெயரில் ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில் கூறியிருப்பதாவது, கணக்குப்பதிவியல் வினாத்தாளில் சில தவறுகள் இருப்பதால் அந்த கேள்விக்கான விடைகளை எழுதிய மாணவர்களுக்கு கருணை அடிப்படையில் 6 மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இந்த தகவல் போலியான தகவல் என்று சி.பி.எஸ்.இ விளக்கம் அளித்துள்ளது. மேலும் இது போன்ற போலியான தகவல்களை மாணவர்கள் நம்ப வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.