CBSE 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – தேர்வு முறை குறித்த முழு விபரம்!
CBSE 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் குறித்த முழு விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது ஹால் டிக்கெட், தேர்வு முறை, பாடத்திட்டம், தேர்வு நேரம் உள்ளிட்டவை குறித்து இப்பதிவில் காணலாம்.
CBSE தேர்வு:
நாடு முழுவதும் கொரோனா தாக்கத்தினால் கடந்த ஆண்டு பள்ளி மற்றும் கல்லூரிகளில் பொதுத்தேர்வுகள் அனைத்தும் நடத்தப்படவில்லை. அதனை தொடர்ந்து CBSE 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. கொரோனாவை தொடர்ந்து மாணவர்களுக்கு கல்வி பாதிக்காத வகையில் ஆன்லைன் வகுப்புகள் தொடரப்பட்டன. பின்னர் கொரோனா பெருந்தொற்றின் காரணமாக CBSE 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. அதாவது பொதுத்தேர்வு இனிமேல் இரண்டு பருவங்களாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
SBI வங்கி ATM இல் பணம் எடுக்க புதிய வழிமுறைகள் – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
அதன்படி முதல் பருவத் தேர்வானது நவம்பர் – டிசம்பர் மாதமும், இரண்டாம் பருவத்தேர்வு மார்ச் – ஏப்ரல் மாதங்களிலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தற்போது முதல் பருவத் தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி CBSE 10ம் வகுப்பு தேர்வு நவம்பர் 30ம் தேதி தொடங்கவிருக்கிறது. அதேபோல் 12ம் வகுப்பு தேர்வு டிசம்பர் 1ம் தேதி தொடங்கவிருக்கிறது. அதனை தொடர்ந்து செய்முறை தேர்வு 10ம் வகுப்பிற்கு நவ.16ம் தேதியும், 12ம் வகுப்பிற்கு நவ.17ம் தேதியும் தொடங்குகிறது.
தமிழகத்தில் கந்தசஷ்டியை முன்னிட்டு நவ.9 உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
இத்தகைய பருவத்தேர்வு முடிவானது கொரோனா காலத்தை கருத்தில் வைத்து கொண்டு வரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் பருவத்தேர்வு 50% பாடத்திட்டங்கள் அடிப்படையில் மட்டுமே நடத்தப்படும். பின்னர் இரண்டாம் பருவத்தேர்வில் மீதி உள்ள பாடத்திட்டம் நடத்தப்படும். இந்நிலையில் தேர்வு முடிவானது இரண்டு தேர்வுகளின் அடிப்படையில் மட்டுமே அறிவிக்கப்படும். அவ்வாறு இல்லையெனில் கொரோனா காரணமாக இதில் ஏதேனும் ஒரு தேர்வு நடத்த முடியாத நிலை ஏற்பட்டால் நடந்து முடிந்த ஒரு தேர்வு மற்றும் செய்முறை தேர்வு அடிப்படையில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தெளிவுபடுத்தியுள்ளது.