தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் கவனத்திற்கு – கல்வித்துறையின் முக்கிய அறிவிப்பு!
தமிழகம் முழுவதும் மே மாத ஆரம்பத்தில் தொடங்கப்பட்ட 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளின் முக்கிய பாட தேர்வுகள் இன்றுடன் முடிவடைந்துள்ள நிலையில், பள்ளிக் கல்வித்துறை தற்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பொதுத்தேர்வு:
தமிழகத்தில் கடந்த 2020 மற்றும் 2021ம் கல்வி ஆண்டுகளில் பள்ளி மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் எதுவும் நடத்தப்படவில்லை. கொரோனா பரவல் பாதிப்புகள் அதிகரித்து வந்த காரணத்தால் மாணவர்களின் நலன் கருதி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களுக்கு அகமதிப்பீடு முறையிலும், மற்ற வகுப்புகளுக்கு தேர்வின்றி தேர்ச்சியும் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. மாணவர்களுக்கு இதனால் எதிர்காலத்தில் பாதிப்புகள் ஏற்படும் என்று கல்வியாளர்கள் எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? வலுக்கும் போராட்டம்!
இந்நிலையில் நடப்பு கல்வி ஆண்டில் ஆரம்பத்தில் கொரோனா 2ம் அலை பரவல் இருந்த காரணத்தால் பள்ளிகள் மிகவும் தாமதமாக தொடங்கப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு சுமையை குறிப்பதற்காக பாடத்திட்டத்தில் இருந்து 50 முதல் 30 சதவீதம் வரை குறைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அனைத்து மாணவர்களுக்கும் பாடங்கள் நடத்தப்பட்டது. மேலும் மாணவர்களுக்கு கட்டாயம் பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்பதற்காக கொரோனா தடுப்பூசிகளை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு செலுத்தியது.
Exams Daily Mobile App Download
அனைத்து விதமான நோய் தடுப்பு விதிமுறைகளுடன் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டு முன்னதாக பொதுத்தேர்வு அட்டவணை கல்வித்துறையால் வெளியிடப்பட்டது. அதன்படி மே 2ம் தேதி தொடங்கிய 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கி, முக்கிய தேர்வுகள் அனைத்தும் இன்றுடன் முடிவடைந்துள்ளது. இன்னும் ஒரு சில தேர்வுகள் மே 28ம் தேதி வரை நடக்க இருக்கிறது. தற்போது பள்ளிக் கல்வித்துறை, 12ம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள்கள் ஜூன் 1ம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள 83 மையங்களில் திருத்தப்பட உள்ளதாகவும், மொத்தம் 50,000 ஆசிரியர்கள் 10 நாட்களில் விடைத்தாள்களை திருத்தும் பணிகளில் ஈடுபட உள்ளனர் என்று தெரிவித்துள்ளது.