ATM கார்டு பயன்படுத்தி ஷாப்பிங் செய்வோர் கவனத்திற்கு – ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு!
ATM கார்டு பயன்படுத்தி வணிக நிறுவனங்களில் பொருட்கள் வாங்குவதற்கு புதிய தடை ஒன்றை ரிசர்வ் வங்கி பிறப்பித்துள்ளது. அதாவது ஆன்லைன் பண மோசடிகளை தடுக்கும் விதமாக இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ATM கார்டு:
இந்த நவீன உலகில் அனைத்து செயல்பாடுகளும் ஆன்லைன் மயமாக்கப்பட்டு வருகிறது. அதாவது ஆன்லைன் முறையில் பண பரிவர்த்தனை உள்ளிட்ட அனைத்து செயல்படுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் இந்த ஆன்லைன் முறை செயல்பாடுகளில் சில மோசடிகளும் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் ATM கார்டு பயன்படுத்தி நேரடியாக பொருட்கள் வாங்கும் வணிக நிறுவனங்களில் பண பரிவர்த்தனை செய்து கொள்ள முடியும். இந்த பண பரிவர்த்தனையின் போது ATM கார்டு முதல் முறை பயன்படுத்தும் போது முழு விபரங்களையும் கொடுத்தால் போதும்.
இன்று முதல் டிச.22ம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!
அடுத்த முறை ATM கார்டின் விபரங்கள் அதில் சேமிக்கப்பட்டு விடும். அதன் பின்னர் நாம் பணம் செலுத்த ATM கார்டின் 3 இலக்க CVV நம்பர் அல்லது 4 இலக்க PIN நம்பர் மட்டும் கூறினால் போதுமானது. ஆனால் தற்போது இந்த ATM கார்டு பண பரிவர்த்தனை முறையின் போது வணிக நிறுவனங்கள் ATM கார்டின் முழுவிபரங்களை சேமிக்க தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதாவது இனிமேல் ஷாப்பிங் செய்துவிட்டு ATM கார்டு மூலம் பணம் செலுத்தும் போது ATM கார்டின் 18 இலக்க எண் உள்ளிட்ட முழு விபரங்களையும் கொடுக்கும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரிகளுக்கு டிச.22ம் தேதி விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
எனவே அனைவரும் தங்களது டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு விபரங்களை மனப்பாடம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். இத்தகைய தனிப்பட்ட நபரின் ATM கார்டு விபரங்களை சேமிப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையால் ஆன்லைன் பண பரிவர்த்தனை மோசடிகள் தடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய தடையானது வரும் ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் ரிசர்வ் வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.