தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி!
தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மே 14ம் முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அடுத்த கல்வியாண்டு ஜூன் 13ம் தேதி அன்று தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது பள்ளிகள் திறப்பில் மாற்றங்கள் இருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகின. தற்போது இது தொடர்பான அறிவிப்பு நாளை வெளியாகும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
பள்ளிகள் திறப்பு
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக நடப்பு கல்வியாண்டு தாமதமாக தொடங்கப்பட்டது. அதன்படி கடந்த செப்டம்பர் மாதம் முதல் 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது. இதனை தொடர்ந்து 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் 3ம் அலையின் தாக்கம் தொடங்கியதால் மீண்டும் பள்ளிகள் ஜனவரி மாதம் முழுவதும் மூடப்பட்டது. இதையடுத்து கடந்த பிப்ரவரி 1ம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்பட்டது.
மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய பென்சன் திட்டம் அமல் – ஜாக்பாட் அறிவிப்பு!
இதனை தொடர்ந்து பொதுத்தேர்வுக்கான பாடங்கள் முழுவதுமாக நடத்தி முடிக்க வேண்டும் என்பதால் ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து வாரத்தில் 6 நாட்கள் வகுப்புகள் நடத்தப்பட்டது. அதனால் மாணவர்களுக்கு இது கூடுதலான மனச்சுமையாக இருந்தது. இதையடுத்து தற்போது 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் தற்போது திட்டமிட்டபடி நடைபெற்று கொண்டிருக்கிறது. இதனை தொடர்ந்து தற்போது கோடைகாலம் தொடங்கியுள்ளதால் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மே 14 முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அடுத்த கல்வியாண்டு ஜூன் 13ம் தேதி அன்று தொடங்கும் என்று கூறப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
தற்போது பள்ளிகளை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று கொண்டிருப்பதால் அடுத்த கல்வியாண்டு தாமதமாக தொடங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது, தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறைக்கு பிறகு அடுத்த கல்வியாண்டு எப்போது தொடங்கப்படும் என்பது குறித்து நாளை காலை 10 மணிக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும். அத்துடன் அடுத்த கல்வியாண்டில் பொதுத்தேர்வுகள் எந்தெந்த தேதிகளில் நடைபெறும் என்பது குறித்த அறிவிப்புகளும் வெளியிடப்படும் என்று கூறியுள்ளார்.