சென்னை மருந்து நிறுவனத்தில் ரெய்டு – அதிகாரிகள் சோதனை! அமெரிக்கா குற்றச்சாட்டு விவகாரம்!!
தமிழகத்தில் சென்னையை சேர்ந்த நிறுவனமான குளோபல் பார்மா ஹெல்த்கேர் நிறுவனத்தில் தயாரித்த கண் சொட்டு மருந்தை பயன்படுத்தி அமெரிக்காவில் ஒருவர் உயிரிழந்த நிலையில், இது குறித்து நேற்று நள்ளிரவு ரெய்டு நடத்தப்பட்டது.
நிறுவனத்தில் ரெய்டு
குளோபல் பார்மா ஹெல்த்கேர் நிறுவனம் எனப்படும் சென்னையை சேர்ந்த மருந்து நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட EzriCare என்ற கண் சொட்டு மருந்தை பயன்படுத்தி அமெரிக்காவில் ஒருவர் பலியானார். மேலும் பலருக்கு பார்வை பறிபோனதால், EzriCare செயற்கை கண்ணீர் கண் சொட்டு மருந்துகளின் திறக்கப்படாத பாட்டில்களை அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (CDC) பரிசோதித்து வருகிறது
சென்னை வாசிகள் கவனத்திற்கு – இனி வீடுகளுக்கு குழாய் மூலம் Gas!! அனுமதித்த மாநகராட்சி!
Follow our Instagram for more Latest Updates
அது மட்டுமில்லாமல் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் அமெரிக்காவில் EzriCare அல்லது Delsam Pharma’s Artificial Tears போன்ற மருந்துகளை வாங்க வேண்டாம் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் அசுத்தமான செயற்கை கண்ணீரைப் பயன்படுத்துவது கண் நோய்த்தொற்றுக்களை ஏற்படுத்தும் எனவும், இதனால் நிரந்தரமான கண்பார்வை இழக்க நேரிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த நிறுவனம் மீது அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ள நிலையில் குளோபல் பார்மா ஹெல்த்கேர் நிறுவனத்தில் நேற்று நள்ளிரவில் தமிழ்நாட்டின் மருந்துக் கட்டுப்பாட்டு ஆய்வாளர்கள் மற்றும் மத்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர்கள் ரெய்டு நடத்தி இருக்கின்றனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில் நிறுவனத்தில் பயன்படுத்தப்பட்ட மூலப்பொருட்களின் மாதிரிகள் தவிர, அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்ட தொகுதிகளிலிருந்து மாதிரிகளை நாங்கள் சேகரித்துள்ளோம். அமெரிக்காவிலிருந்து திறக்கப்படாத மாதிரிகளுக்காக நாங்கள் காத்திருக்கிறோம். அரசிடம் முதற்கட்ட அறிக்கை தாக்கல் செய்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.