நவம்பர் 8: இந்த வருடத்தின் கடைசி சந்திர கிரகணம் – இந்தியாவில் எங்கு, எப்போது தெரியும்?
நடப்பு ஆண்டு கடந்த மாதம் 25ம் தேதி சூரிய கிரகணம் நிகழ்ந்தது. அதனை தொடர்ந்து வரும் 8ம் தேதி சந்திர கிரகணம் நிகழவிருக்கிறது. இந்தியாவில் பல நகரங்களில் இந்த சந்திர கிரகணம் தெரியும் என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.
சந்திர கிரகணம்:
வானில் பூமி, சந்திரன், சூரியன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் நிகழ்வு சூரிய கிரகணம் எனப்படுகிறது. கடைசியாக சூரிய கிரகணமானது கடந்த 25ம் தேதி நிகழ்ந்தது. இதனை தெற்கு ஆசியா, ஐரோப்பா,மேற்கு ஆசியா, கிழக்கு ஆப்பிரிக்கா, வடக்கு அட்லாண்டிக் ஆகிய பகுதிகளிலும் இந்தியாவிலும் பார்க்க முடிந்தது. அதனை தொடர்ந்து வரும் 8ம் தேதி முழு சந்திர கிரகணம் நிகழவிருப்பதாக NASA தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இந்த முழு சந்திர கிரகணத்தின் போது சந்திரன் ஒரு ரத்த நிலவாக காட்சியளிக்கும் இதனை ‘Blood moon’ என்கின்றனர். மேலும் இந்தியாவில் டெல்லி, பாட்னா மற்றும் ராஞ்சி, கொல்கத்தா, சிலிகுரி, பாட்னா, ராஞ்சி, குவஹாத்தி போன்ற அனைத்து பகுதிகளிலும் இந்த கிரகணம் தெரியும். அதே போல பிற நாடுகளிலும் கிரகணம் தென்படும் என்று அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் பெய்து வரும் கனமழை – மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் உத்தரவு!
Follow our Instagram for more Latest Updates
மேலும் இந்திய நேரப்படி 2.39 மணிக்கு கிரகணம் தொடங்கி மாலை 6.19 மணி வரை இருக்கும். மேலும் தமிழகத்தில் 5.38 மணிக்கு கிரகணம் தென்படும் என்று அறிவியலாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த கிரகணத்தை வெற்றுக்கண்களால் பார்க்கலாம். தொலைநோக்கி உள்ளிட்ட எவ்வித உபகரணங்களும் தேவையில்லை என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.