2022 பத்ம விருதுகள் பரிந்துரைக்கு செப்டம்பர் 15 இறுதி நாள் – மத்திய அரசு அறிவிப்பு!
இந்தியாவில் வழங்கப்படும் மிக உயரிய விருதான பத்ம விருதுகள் வழங்குவதற்கு பரிந்துரை பட்டியலை வரும் செப்டம்பர் 15ம் தேதி வரை அனுப்பலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
பத்ம விருதுகள்:
இந்திய அரசு 1954ம் ஆண்டு முதல் நாட்டு மக்களுக்கு குறிப்பிட்ட துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு பத்ம விருதுகளை வழங்கி வருகிறது. பத்ம விருதுகள் நாட்டின் உயரிய விருதாக கருதப்படுகிறது. அரசியல், சமூகம், நிர்வாகம், கலை, கலாசாரம், இசை, நடனம், சினிமா, நாடகம், ஓவியம், சிற்பம், சட்டம், நீதி, பொது சேவை சமூக நலம் போன்ற பல்வேறு துறைகளில் சிறந்த முறையில் பணியாற்றியவர்களை கண்டறிந்து ஆண்டுதோறும் இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன. பாரத ரத்னா உள்ளிட்ட பத்ம விருதுகளுக்கு, பரிசுத்தொகை வழங்கப்படாது.
நாமக்கல் மாவட்டத்தில் புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
2022ம் ஆண்டு குடியரசு தின விழாவில் வழங்கப்பட உள்ள பத்ம விருதுகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் மற்றும் பரிந்துரைகளை அனுப்பவும் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. பத்ம விருதுகளை ‘மக்கள் பத்ம விருதுகளாக’ மாற்ற மத்திய அரசு உறுதியளித்துள்ளது. இதனால் சிறப்பாக செயல் புரிந்தவர்கள், பெண்கள், பட்டியலினத்தவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சமூகத்துக்கு தன்னலமற்ற சேவை செய்தவர்களை அடையாளம் கண்டு அவர்களை பத்ம விருதுகளுக்கு பரிந்துரைக்கும்படி மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
TN Job “FB Group” Join Now
இதற்கான விண்ணப்பங்கள், பரிந்துரைகள் https://padmaawards.gov.in என்ற இணையதளத்தில் அறிவுறுத்தியுள்ள படி இருக்க வேண்டும். இதற்கான விண்ணப்பத்தில் மேற்கோள்கள் கதை வடிவத்தில் அதிகபட்சம் 800 வார்த்தைகளில் இருக்க வேண்டும். விருது தொடர்பாக அரசின் விதிமுறைகள் அனைத்தும், https://padmaawards.gov.in/AboutAwards.aspx என்ற இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட துறைகளில் சாதனை புரிந்தவர்களின் சாதனைகளை அதில் தெளிவாக விவரிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பத்ம விருதுகளுக்கு பரிந்துரைகளை அனுப்ப வரும் செப்டம்பர் 15ம் தேதி கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.