அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – கார்டுகளை ஒப்படைக்க மே 20ம் தேதி வரை காலக்கெடு!

0
அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு - கார்டுகளை ஒப்படைக்க மே 20ம் தேதி வரை காலக்கெடு!
அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு - கார்டுகளை ஒப்படைக்க மே 20ம் தேதி வரை காலக்கெடு!
அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – கார்டுகளை ஒப்படைக்க மே 20ம் தேதி வரை காலக்கெடு!

மாநிலம் முழுவதும் உள்ள தகுதியில்லாத ரேஷன் அட்டைதாரர்கள் வரும் மே 20 ஆம் தேதிக்குள் தங்களது ரேஷன் கார்டுகளை ஒப்படைக்குமாறு உத்திர பிரதேச மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.

ரேஷன் கார்டு ஒப்படைப்பு

மத்திய அரசின் பொது விநியோகத்துறையின் கீழ் கொடுக்கப்படும் இலவச உணவுப்பொருட்களை தகுதியில்லாத பலர் வாங்கி வீணடிப்பதாக அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதையடுத்து, அப்படிப்பட்டவர்கள் தங்களது ரேஷன் கார்டுகளை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், ரேஷன் கார்டுகளை ஒப்படைப்பதற்கான காலக்கெடு ஏப்ரல் 30 ஆம் தேதியுடன் முடிவடைந்த போதிலும் உத்திர பிரதேச மாநிலம் காஜியாபாத் முழுவதும் இதுவரை 991 பேர் மட்டுமே தங்களது கார்டுகளை திரும்ப ஒப்படைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post Office இல் சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவுறுத்தல்கள் வெளியீடு!

இப்போது தகுதியில்லாத நபர்கள் தங்கள் ரேஷன் கார்டுகளை ஒப்படைப்பதற்கான காலக்கெடு மே 20 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு மாவட்ட வழங்கல் துறை மீட்பு நடவடிக்கைகளைத் தொடங்கும் என்றும், கார்டுகளை ஒப்படைக்காதவர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இப்போது வரை இந்த அட்டைகளை வைத்திருக்க எத்தனை பேர் தகுதியற்றவர்கள் என்பது குறித்து அதிகாரப்பூர்வ மதிப்பீடு எதுவும் இல்லை என்று மாவட்ட வழங்கல் துறை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Exams Daily Mobile App Download

இது குறித்து மாவட்ட வழங்கல் அதிகாரி சீமா சவுத்ரி கூறுகையில், ‘தகுதியற்ற ரேஷன் அட்டைதாரர்கள் மே 20 காலக்கெடுவைத் தவறவிட்டால், நாங்கள் அவர்களுக்கு மீட்பு அறிவிப்புகளை அனுப்புவோம். மேலும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் விதிகளின் கீழ் அவர்களுக்கு எதிராக எஃப்ஐஆர் கூட பதிவு செய்யப்படலாம். மத்திய அரசின் வழிகாட்டுதல்களின்படி மீட்பு பணிகள் மேற்கொள்ளப்படும். விஜய் நகர், வசுந்தரா போன்ற இடங்களில் உள்ள எங்கள் துணை அலுவலகங்களில் தனிநபர்கள் தங்கள் கார்டுகளை ஒப்படைக்கலாம். இல்லையெனில் மே 20க்கு பிறகு மீட்பு செயல்முறை தொடங்கும்’ என்று தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!